தொடக்கம் |
|
|
11. | மிக்குப் பெருகி, மிகு புனல் பாய்ந்தாலும், உப்பு ஒழிதல் செல்லா ஒலி கடல்போல், மிக்க இன நலம் நன்கு உடைய ஆயினும், என்றும், மன நல ஆகாவாம் கீழ். | |
|
உரை
|
|
|
|
|
12. | விழும் இழை நல்லார் வெருள் பிணைபோல் நோக்கம் கெழுமிய நாணை மறைக்கும்; தொழுநையுள், மாலையும் மாலுள் மயக்குறுத்தாள்;-அஃதால், அச் சால்பினைச் சால்பு அறுக்குமாறு. | |
|
உரை
|
|
|
|
|
13. | பாப்புக் கொடியாற்குப் பால்மேனியான் போலத் தாக்கி அமருள் தலைப்பெய்யார், போக்கி, வழியராய் நட்டார்க்கு மா தவம் செய்வாரே- கழி விழாத் தோள் ஏற்றுவார். | |
|
உரை
|
|
|
|
|
14. | தாம் நட்டு ஒழுகுதற்குத் தக்கார் என வேண்டா; யார் நட்பது ஆயினும், நட்புக் கொளல் வேண்டும்;- கான் அட்டு நாறும் கதுப்பினாய்!-தீற்றாதோ, நாய், நட்டால், நல்ல முயல்? | |
|
உரை
|
|
|
|
|
15. | அம் கண் விசும்பின் அகல் நிலாப் பாரிக்கும் திங்களும், தீங்குறுதல் காண்டுமால்;-பொங்கி, அறைப் பாய் அருவி அணி மலை நாட!- உறற்பால யார்க்கும் உறும். | |
|
உரை
|
|
|
|
|
16. | நண்பு ஒன்றித் தம்மாலே நாட்டப்பட்டார்களை, கண் கண்ட குற்றம் உள எனினும், காய்ந்தீயார்;- பண் கொண்ட தீம் சொல் பணைத் தோளாய்!-யார் உளரோ, தம் கன்று சாக் கறப்பார்? | |
|
உரை
|
|
|
|
|
17. | உள்ளது ஒருவர் ஒருவர் கை வைத்தக்கால், கொள்ளும் பொழுதே கொடுக்க, தாம் கொள்ளார்; ‘நிலைப் பொருள்’ என்று அதனை நீட்டித்தல் வேண்டா;- புலைப் பொருள் தங்கா, வெளி. | |
|
உரை
|
|
|
|
|
18. | ‘தக்காரோடு ஒன்றி, தமராய் ஒழுகினார்; மிக்காரால்’ என்று, சிறியாரைத் தாம் தேறார்;- கொக்கு ஆர் வள வயல் ஊர!-தினல் ஆமோ, அக்காரம் சேர்ந்த மணல்? | |
|
உரை
|
|
|
|
|
19. | கறுத்து ஆற்றித் தம்மைக் கடிய செய்தாரைப் பொறுத்து, ஆற்றிச் சேறல் புகழால்; ஒறுத்து ஆற்றின்,- வான் ஓங்கு உயர் வரை வெற்ப!-பயம் இன்றே; தான் நோன்றிட வரும், சால்பு. | |
|
உரை
|
|
|
|
|
20. | காவலனை ஆக வழிபட்டார், மற்று அவன் ஏவல் வினை செய்திருந்தார்க்கு உதவு அடுத்தல்- ஆ அணைய நின்றதன் கன்று, முலை இருப்ப, தாய் அணல் தான் சுவைத்தற்று. | |
|
உரை
|
|
|
|