21. ‘உரை முடிவு காணான்; இளமையோன்!’ என்ற
நரை முது மக்கள் உவப்ப, நரை முடித்து,
சொல்லால் முறை செய்தான், சோழன்;-குல விச்சை
கல்லாமல் பாகம் படும்.
உரை
   
22. உரைத்தாரை மீதூரா மீக் கூற்றம்,-பல்லி
நெரித்த சினை போலும் நீள் இரும் புன்னைப்
பொரிப்பூ இதழ் உறைக்கும் பொங்கு நீர்ச் சேர்ப்ப!-
நரிக் கூக் கடற்கு எய்தாவாறு.
உரை
   
23. அருமையுடைய பொருள் உடையார், தங்கண்
கருமம் உடையாரை நாடார்;-எருமைமேல்
நாரை துயில் வதியும் ஊர!-குளம் தொட்டு,
தேரை வழிச் சென்றார் இல்.
உரை
   
24. இசைவ கொடுப்பதூஉம், ‘இல்’ என்பதூஉம்,
வசை அன்று; வையத்து இயற்கை; அஃது அன்றி,
பசை கொண்டவன் நிற்க, பாத்து உண்ணான் ஆயின்,
நசை கொன்றான் செல் உலகம் இல்.
உரை
   
25. உரிதினில் தம்மோடு உழந்தமை கண்டு,
பிரிவு இன்றிப் போற்றப் படுவார்; திரிவு இன்றித்
தாம் பெற்றதனால், உவவார்; பெரிது அகழின்,
பாம்பு காண்பாரும் உடைத்து.
உரை
   
26. விடல் அரிய துப்புடைய வேட்கையை நீக்கி,
படர்வு அரிய நல் நெறிக்கண் நின்றார், இடர் உடைத்தாய்ப்
பெற்ற விடக்கு நுகர்தல்,-கடல் நீந்தி,
கன்று அடியுள் ஆழ்ந்துவிடல்.
உரை
   
27. தேர்ந்து, கண்ணோடாது, தீவினையும் அஞ்சலராய்,
சேர்ந்தாரை எல்லாம் சிறிது உரைத்து, தீர்ந்த
விரகர்கட்கு எல்லாம் வெறுப்பனவே செய்யும்
நரகர்கட்கு இல்லையோ நஞ்சு?
உரை
   
28. தாம் ஆற்றகில்லாதார், தாம் சாரப்பட்டாரைத்
தீ மாற்றத்தாலே பகைப்படுத்திட்டு, ஏமாப்ப
முன் ஓட்டுக்கொண்டு, முரண் அஞ்சிப் போவாரே-
உண் ஓட்டு அகல் உடைப்பார்.
உரை
   
29. ‘முழுதுடன் முன்னே வகுத்தவன்’ என்று,
தொழுது இருந்தக்கண்ணே ஒழியுமோ, அல்லல்?-
இழுகினான் ஆகாப்பது இல்லையே, முன்னம்
எழுதினான் ஓலை பழுது.
உரை
   
30. நிறையான் மிகுகலா நேரிழையாரைச்
சிறையான் அகப்படுத்தல் ஆகா; அறையோ-
வருந்த வலிதினின் யாப்பினும், நாய் வால்
திருந்துதல் என்றுமோ இல்.
உரை