31. ‘எமர் இது செய்க, எமக்கு!’ என்று, வேந்தன்
தமரைத் தலைவைத்த காலை, தமர் அவற்கு
வேலின்வாய் ஆயினும், வீழ்வார்; மறுத்து உரைப்பின்,-‘
ஆல்’ என்னின், ‘பூல்’ என்னுமாறு.
உரை
   
32. தெருளாது ஒழுகும் திறன் இலாதாரைப்
பொருளால் அறுத்தல் பொருளே; பொருள் கொடுப்ப,
பாணித்து நிற்கிற்பார் யாவர் உளர்?-வேல் குத்திற்கு
ஆணியின் குத்தே வலிது.
உரை
   
33. வெஞ் சின மன்னவன் வேண்டாத செய்யினும்,
நெஞ்சத்துக் கொள்வ சிறிதும் செயல் வேண்டா;-
என் செய்து அகப்பட்டக்கண்ணும், எடுப்புபவோ,
துஞ்சு புலியைத் துயில்?
உரை
   
34. பரந்த திறலாரைப் பாசி மேல் இட்டு,
கரந்து மறைக்கலும் ஆமோ?-நிரந்து எழுந்த
வேயின் திரண்ட தோள், வேற்கண்ணாய்!-விண் இயங்கும்
ஞாயிற்றைக் கைம் மறைப்பார் இல்.
உரை
   
35. ‘தமன்’ என்று இரு நாழி ஈத்தவன் அல்லால்,
‘நமன்’ என்று, காயினும், தான் காயான், மன்னே,
‘அவன்’ இவன்’ என்று உரைத்து எள்ளி;-மற்று யாரே,
நம நெய்யை நக்குபவர்?
உரை
   
36. ‘மிக்கு உடையர் ஆகி, மிக மதிக்கப் பட்டாரை
ஒற்கப்பட முயறும்’ என்றல் இழுக்கு ஆகும்;-
நற்கு எளிது ஆகிவிடினும், நளிர் வரைமேல்
கல் கிள்ளி, கை உய்ந்தார் இல்.
உரை
   
37. வைத்ததனை வைப்பு என்று உணரற்க! தாம் அதனைத்
துய்த்து, வழங்கி, இரு பாலும் அத் தகத்
தக்குழி நோக்கி, அறம் செய்க!-அஃது அன்றோ,
எய்ப்பினில் வைப்பு என்பது?
உரை
   
38. உற்றான், உறாஅன், எனல் வேண்டா; ஒண் பொருளைக்
கற்றானை நோக்கியே கைவிடுக! கற்றான்
கிழவன் உரை கேட்கும்; கேளான் எனினும்,-
இழவு அன்று, எருது உண்ட உப்பு.
உரை
   
39. நாட்டிக் கொளப்பட்டார் நன்மை இலர் ஆயின்,
‘காட்டி, களைதும்’ என வேண்டா;-ஓட்டி
இடம்படுத்த கண்ணாய்!-இறக்கும் மை ஆட்டை
உடம்படுத்து வேள்வு உண்டார் இல்.
உரை
   
40. பயன் நோக்காது, ஆற்றவும் பாத்து அறிவு ஒன்று இன்றி,
இசை நோக்கி, ஈகின்றார் ஈகை,-வயமாப்போல்
ஆலித்துப் பாயும் அலை கடல் தண் சேர்ப்ப!-
கூலிக்குச் செய்து உண்ணும் ஆறு
உரை