தொடக்கம் |
|
|
41. | வெள்ளம் வருங்காலை ஈர்ப்படுக்கும்; அஃதேபோல், கள்ளம் உடையாரைக் கண்டே அறியலாம்;- ஒள் அமர்க் கண்ணாய்!-ஒளிப்பினும், உள்ளம் படர்ந்ததே கூறும், முகம். | |
|
உரை
|
|
|
|
|
42. | விளிந்தாரே போலப் பிறர் ஆகி நிற்கும் முளிந்தாரைத் தஞ்சம் மொழியலோ வேண்டா;- அளிந்தார்கணாயினும், ஆராயான் ஆகித் தெளிந்தான் விரைந்து கெடும். | |
|
உரை
|
|
|
|
|
43. | மறந்தானும், தாம் உடைய தாம் போற்றின் அல்லால், சிறந்தார் தமர் என்று, தேற்றார் கை வையார்;- கறங்கு நீர் கல் அலைக்கும் கானல் அம் சேர்ப்ப!- இறந்தது பேர்த்து அறிவார் இல். | |
|
உரை
|
|
|
|
|
44. | கை ஆர உண்டமையால், காய்வார் பொருட்டாக, பொய்யாகத் தம்மைப் பொருள் அல்ல கூறுபவேல்,- மை ஆர உண்ட கண் மாண் இழாய்!-என் பரிப, செய்யாத எய்தாஎனின்? | |
|
உரை
|
|
|
|
|
45. | நோவ உரைத்தாரைத் தாம் பொறுக்கலாற்றாதார், நாவின் ஒருவரை வைதால், வயவு உரை,- பூவின் பொலிந்து அகன்ற கண்ணாய்!-அது அன்றோ, தீ இல்லை ஊட்டும் திறம்? | |
|
உரை
|
|
|
|
|
46. | முகம் புறத்துக் கண்டால் பொறுக்கலாதாரை, ‘அகம் புகுதும்!’ என்று இரக்கும் ஆசை-இருங் கடத்துத் தக்க நெறியிடைப் பின்னும் செலப் பெறார் ஒக்கலை வேண்டி அழல். | |
|
உரை
|
|
|
|
|
47. | ஆயிரவரானும் அறிவிலார் தொக்கக்கால், மா இரு ஞாலத்து மாண்பு ஒருவன் போல்கலார்;- பாய் இருள் நீக்கும் மதியம்போல், பல் மீனும், காய்கலாவாகும் நிலா. | |
|
உரை
|
|
|
|
|
48. | நிரை தொடி தாங்கிய நீள் தோள் மாற்கேயும், உரை ஒழியாவாகும்; உயர்ந்தோர்கண் குற்றம்,- மரையா கன்று ஊட்டும் மலை நாட!-மாயா; நரை ஆன் புறத்து இட்ட சூடு. | |
|
உரை
|
|
|
|
|
49. | வீங்கு தோள் செம்பியன் சீற்றம் விறல் விசும்பில் தூங்கும் எயிலும் தொலைத்தலான், ஆங்கு முடியும் திறத்தால் முயல்க தாம்!-கூர் அம்பு அடி இழுப்பின், இல்லை, அரண். | |
|
உரை
|
|
|
|
|
50. | கற்றது ஒன்று இன்றிவிடினும், குடிப் பிறந்தார், மற்றொன்று அறிவாரின், மாண் மிக நல்லரால்; பொற்ப உரைப்பான் புக வேண்டா,-கொற்சேரித் துன்னூசி விற்பவர் இல். | |
|
உரை
|
|
|
|