தொடக்கம் |
|
|
51. | இயல் பகை வெல்குறுவான், ஏமாப்ப முன்னே அயல் பகை தூண்டி விடுத்து, ஓர் நயத்தால் கறு வழங்கி, கைக்கு எளிதாச் செய்க! அதுவே சிறு குரங்கின் கையால் துழா. | |
|
உரை
|
|
|
|
|
52. | பாரதத்துள்ளும், பணையம் தம் தாயமா, ஈர்-ஐம்பதின்மரும் போர் எதிர்ந்து, ஐவரொடு ஏதிலர் ஆகி, இடை விண்டார்; ஆதலால், காதலரொடு ஆடார் கவறு. | |
|
உரை
|
|
|
|
|
53. | அல்லல் ஒருவர்க்கு அடைந்தக்கால், மற்று அவர்க்கு நல்ல கிளைகள் எனப்படுவார், நல்ல வினை மரபின், மற்று அதனை நீக்குமதுவே மனை மரம் ஆய மருந்து. | |
|
உரை
|
|
|
|
|
54. | தெள்ளி உணரும் திறன் உடையார் தம் பகைக்கு உள் வாழ் பகையைப் பெறுதல் உறுதியே; கள்ளினால் கள் அறுத்தல் காண்டும்; அது அன்றோ, முள்ளினால் முள் களையும் ஆறு. | |
|
உரை
|
|
|
|
|
55. | ஆற்றவும் கற்றார் அறிவுடையார்; அஃது உடையார் நால் திசையும் செல்லாத நாடு இல்லை; அந் நாடு வேற்று நாடு ஆகா; தமவே ஆம்; ஆயினால், ஆற்று உணா வேண்டுவது இல். | |
|
உரை
|
|
|
|
|
56. | ‘எமக்குத் துணையாவார் யாவர்?’ என்று எண்ணி, தமக்குத் துணையாவார்த் தாம் தெரிதல் வேண்டா; பிறர்க்குப் பிறர் செய்வது ஒன்று உண்டோ? இல்லை;- தமக்கு மருத்துவர் தாம். | |
|
உரை
|
|
|
|
|
57. | ‘கைவிட்ட ஒண் பொருள் கைவரவு இல்’ என்பார் மெய்ப்பட்ட ஆறே உணர்ந்தாரால், மெய்யா;- மடம் பட்ட மான் நோக்கின் மா மயில் அன்னாய்!- கடம் பெற்றான் பெற்றான் குடம். | |
|
உரை
|
|
|
|
|
58. | நிரந்து வழி வந்த நீசருள் எல்லாம் பரந்து ஒருவர் நாடுங்கால், பண்புடையார் தோன்றார்;- மரம் பயில் சோலை மலை நாட!-என்றும் குரங்கினுள் நன் முகத்த இல். | |
|
உரை
|
|
|
|
|
59. | முட்டு இன்று ஒருவர் உடைய பொழுதின்கண், அட்டிற்றுத் தின்பவர் ஆயிரவர் ஆபவே;- கட்டு அலர் தார் மார்ப!-கலி ஊழிக் காலத்து, கெட்டார்க்கு நட்டாரோ இல்! | |
|
உரை
|
|
|
|
|
60. | ஆற்றும் இளமைக்கண் கல்லாதான் மூப்பின்கண் போற்றும் எனவும் புணருமே?-ஆற்றச் சுரம் போக்கி உல்கு கொண்டார் இல்லை; மற்று இல்லை, மரம் போக்கிக் கூலி கொண்டார். | |
|
உரை
|
|
|
|