தொடக்கம் |
|
|
61. | ‘உணற்கு இனிய இந் நீர் பிறிதுழி இல்’ என்னும் கிணற்று அகத்துத் தேரைபோல் ஆகார், கணக்கினை முற்றப் பகலும் முனியாது இனிது ஓதிக் கற்றலின், கேட்டலே நன்று. | |
|
உரை
|
|
|
|
|
62. | கழுமலத்து யாத்த களிறும் கருவூர் விழுமியோன் மேற்சென்றதனால், விழுமிய வேண்டினும், வேண்டாவிடினும், உறற்பால தீண்டா விடுதல் அரிது. | |
|
உரை
|
|
|
|
|
63. | எவ்வம் துணையாப் பொருள் முடிக்கும் தாளாண்மை, தெய்வம் முடிப்புழி, என் செய்யும், மொய் கொண்டு?- பூப் புக்கு வண்டு ஆர்க்கும் ஊர!- குறும்பு, இயங்கும் கோப் புக்குழி, செய்வது இல். | |
|
உரை
|
|
|
|
|
64. | கல்லாதவரிடைக் கட்டுரையின் மிக்கது ஓர் பொல்லாதது இல்லை; ஒருவற்கு-நல்லாய்!- இழுக்கத்தின் மிக்க இழிவு இல்லை; இல்லை, ஒழுக்கத்தின் மிக்க உயர்வு. | |
|
உரை
|
|
|
|
|
65. | வென்று அடுகிற்பாரை வேர்ப்பித்து, அவர் காய்வது ஒன்றொடு நின்று சிறியார் பல செய்தல்- குன்றொடு தேன் கலாம் வெற்ப!-அது பெரிதும் நன்றொடு வந்தது ஒன்று அன்று. | |
|
உரை
|
|
|
|
|
66. | முன் இன்னார் ஆயினும், மூடும் இடர் வந்தால், பின் இன்னார் ஆகிப் பிரியார், ஒரு குடியார்; பொன்னாச் செயினும், புகாஅர்-புனல் ஊர!- துன்னினார் அல்லர், பிறர். | |
|
உரை
|
|
|
|
|
67. | சுற்றத்தார், நட்டார், எனச் சென்று, ஒருவரை அற்றத்தால் தேறார், அறிவுடையார்;-கொற்றப் புள் ஊர்ந்து, உலகம் தாவிய அண்ணலேஆயினும், சீர்ந்தது செய்யாதார் இல். | |
|
உரை
|
|
|
|
|
68. | எனைப் பலவே ஆயினும், சேய்த்தாப் பெறலின், தினைத் துணையேயானும் அணிக் கொண்டல் நன்றே;- இனக் கலை தேன் கிழிக்கும் ஏ கல் சூழ் வெற்ப!- பனைப் பதித்து, உண்ணார் பழம். | |
|
உரை
|
|
|
|
|
69. | தம் தம் பொருளும், தமர்தம் வளமையும், முந்துற நாடிப் புறந்தரல் ஓம்புக!- அம் தண் அருவி மலை நாட!-சேண் நோக்கி, நந்து, நீர் கொண்டதே போன்று! | |
|
உரை
|
|
|
|
|
70. | சிறியவர் எய்திய செல்வத்தின், மாண்ட பெரியவர் நல்குரவு நன்றே, தெரியின்;- மது மயங்கு பூங் கோதை மாணிழாய்!-மோரின் முது நெய் தீது ஆகலோ இல். | |
|
உரை
|
|
|
|