தொடக்கம் |
|
|
71. | வன் பாட்டவர் பகை கொள்ளினும், மேலாயார், புன் பாட்டவர் பகை கோடல் பயம் இன்றே;- கண் பாட்ட பூங் காவிக் கானல் அம் தண் சேர்ப்ப!- வெண் பாட்டம் வெள்ளம் தரும். | |
|
உரை
|
|
|
|
|
72. | நடலை இலர் ஆகி நன்று உணராராய முடலை முழுமக்கள் மொய் கொள் அவையுள், உடலா ஒருவற்கு உறுதி உரைத்தல்- கடலுளால் மா வடித்தற்று. | |
|
உரை
|
|
|
|
|
73. | ‘யானும்’ மற்று இவ் இருந்த எம் முன்னும், ஆயக்கால், ஈனம் செயக் கிடந்தது இல்’ என்று, கூனல் படை மாறு கொள்ளப் பகை தூண்டல் அஃதே- இடை நாய்க்கு எலும்பு இடுமாறு. | |
|
உரை
|
|
|
|
|
74. | கண் இல் கயவர் கருத்து உணர்ந்து, கைம்மிக நண்ணி, அவர்க்கு நலனுடைய செய்பவேல்,- எண்ணி இடர் வரும் என்னார், புலி முகத்து உண்ணி பறித்துவிடல். | |
|
உரை
|
|
|
|
|
75. | பெரியார்க்குச் செய்யும் சிறப்பினைப் பேணிச் சிறியார்க்குச் செய்துவிடுதல்,-பொறி வண்டு பூ மேல் இசை முரலும் ஊர!-அது அன்றோ, நாய்மேல் தவிசு இடும் ஆறு? | |
|
உரை
|
|
|
|
|
76. | செருக் கெழு மன்னர்த் திறல் உடையார் சேர்ந்தால், ஒருத்தரை அஞ்சி உலைதலும் உண்டோ?- உருத்த சுணங்கின் ஒளியிழாய்!- கூரிது, எருத்து வலியதன் கொம்பு. | |
|
உரை
|
|
|
|
|
77. | அன்பின் நெகிழ வழிபட்டுக் கொள்ளாது, நின்ற பொழுதின் முடிவித்துக் கொள்வதே- கன்று விட்டு ஆக் கறக்கும் போழ்தில் கறவானாய், அம்பு விட்டு ஆக் கறக்குமாறு. | |
|
உரை
|
|
|
|
|
78. | இணர் ஓங்கி வந்தாரை, என் உற்றக்கண்ணும், உணர்பவர் அஃதே உணர்ப;-உணர்வார்க்கு- அணி மலை நாட!-அளறு ஆடிக்கண்ணும், மணி மணியாகி விடும். | |
|
உரை
|
|
|
|
|
79. | கோவாத சொல்லும் குணன் இலா மாக்களை நாவாய் அடக்கல் அரிது ஆகும்;-நாவாய் களிகள்போல் தூங்கும் கடல் சேர்ப்ப!-வாங்கி வளி தோட்கு இடுவாரோ இல். | |
|
உரை
|
|
|
|
|
80. | காழ் ஆர மார்ப! கசடு அறக் கை காவாக் கீழாயோர் செய்த பிழைப்பினை, மேலாயோர் உள்ளத்துக் கொண்டு நேர்ந்து ஊக்கல், குறு நரிக்கு நல்ல நாராயம் கொளல். | |
|
உரை
|
|
|
|