தொடக்கம் |
|
|
81. | நாடி, ‘நமர்’ என்று நன்கு புறந்தந்தாரைக் கேடு பிறரொடு சூழ்தல்,-கிளர் மணி நீடு அகல் வெற்ப!-நினைப்பு இன்றி, தாம் இருந்த கோடு குறைத்துவிடல். | |
|
உரை
|
|
|
|
|
82. | பொற்பவும் பொல்லாதனவும், புணர்ந்திருந்தார் சொல் பெய்து உணர்த்துதல் வேண்டுமோ?-விற் கீழ் அரி தாய்ப் பரந்து அகன்ற கண்ணாய்!-அறியும், பெரிது ஆள்பவனே பெரிது. | |
|
உரை
|
|
|
|
|
83. | உற்றதற்கு எல்லாம் உரம் செய்ய வேண்டுமோ? கற்று அறிந்தார்தம்மை வெகுளாமைக் காப்பு அமையும்; நெல் செய்யப் புல் தேய்ந்தாற்போல, நெடும் பகை, தற் செய்ய, தானே கெடும். | |
|
உரை
|
|
|
|
|
84. | ‘இது மன்னும் தீது’ என்று இயைந்ததூஉம், ஆவார்க்கு அது மன்னும் நல்லதே ஆகும்;-மது நெய்தல் வீ நாறு கானல் விரி திரைத் தண் சேர்ப்ப!- தீ நாள் திரு உடையார்க்கு இல். | |
|
உரை
|
|
|
|
|
85. | ஒட்டிய காதல் உமையாள் ஒரு பாலா, கட்டங்க வெல் கொடி கொண்டானும், கொண்டானே;- விட்டு ஆங்கு அகலா முழு மெய்யும் கொள்பவே, நட்டாரை ஒட்டியுழி. | |
|
உரை
|
|
|
|
|
86. | உழை இருந்து, நுண்ணிய கூறி, கருமம், புரை இருந்தவாறு அறியான், புக்கான் விளிதல்- நிரை இருந்து மாண்ட அரங்கினுள், வட்டு, கரை இருந்தார்க்கு எளிய, போர். | |
|
உரை
|
|
|
|
|
87. | கள்ளி அகிலும், கருங் காக்கைச் சொல்லும்போல், எள்ளற்க, யார் வாயும் நல் உரை!-தெள்ளிதின் ஆர்க்கும் அருவி மலை நாட!-நாய் கொண்டால், பார்ப்பாரும் தின்பர், உடும்பு. | |
|
உரை
|
|
|
|
|
88. | தெற்றப் பரிந்து ஒருவர் தீர்ப்பர் எனப்பட்டார்க்கு உற்ற குறையை உரைப்ப, தாம்;-தெற்ற அறை ஆர் அணி வளையாய்!-தீர்தல் உறுவார் மறையார், மருத்துவர்க்கு நோய். | |
|
உரை
|
|
|
|
|
89. | கண்ணின் மணியேபோல் காதலால் நட்டாரும், உன்னும் துணையும் உளரா, பிறர் ஆவர்;- எண்ணி உயிர் கொள்வான் ஏன்று திரியினும், உண்ணும் துணைக் காக்கும், கூற்று. | |
|
உரை
|
|
|
|
|
90. | செந்நீரார் போன்று சிதைய மிதிப்பார்க்கும், பொய்ந்நீரார் போன்று பொருளை முடிப்பார்க்கும், அந் நீர் அவரவர்க்குத் தக்காங்கு ஒழுகுபவே- வெந் நீரில் தண்ணீர் தெளித்து. | |
|
உரை
|
|
|
|