தொடக்கம் |
|
|
91. | பெரு மலை நாட!-பிறர் அறியலாகா அரு மறையை ஆன்றோரே காப்பர்;-அரு மறையை நெஞ்சில் சிறியார்க்கு உரைத்தல், பனையின்மேல் பஞ்சி வைத்து எஃகிவிட்டற்று. | |
|
உரை
|
|
|
|
|
92. | பொலந் தார் இராமன் துணையாகப் போதந்து, இலங்கைக் கிழவற்கு இளையான், இலங்கைக்கே பேர்ந்து இறை ஆயதூஉம் பெற்றான்;-பெரியாரைச் சார்ந்து கெழீஇயிலார் இல் | |
|
உரை
|
|
|
|
|
93. | சால மறைத்து ஓம்பிச் சான்றவர் கைகரப்ப, காலை கழிந்ததன் பின்றையும், மேலைக் கறவைக் கன்று ஊர்ந்தானைத் தந்தையும் ஊர்ந்தான்;- முறைமைக்கு மூப்பு இளமை இல். | |
|
உரை
|
|
|
|
|
94. | நற்பால கற்றாரும் நாடாது சொல்லுவரால்; இற்பாலர் அல்லார் இயல்பு இன்மை நோவது என்?- கற்பால் இலங்கு அருவி நாட!-மற்று யாரானும் சொல் சோர்விலாதாரோ இல். | |
|
உரை
|
|
|
|
|
95. | தத்தமக்குக் கொண்ட குறியோ தவம் அல்ல; செத்துக! சாந்து படுக்க! மனம் ஒத்துச் சமத்தனாய் நின்று ஒழுகும் சால்பு தவமே- நுகத்துப் பகல் ஆணி போன்று. | |
|
உரை
|
|
|
|
|
96. | மாடம் இடிந்தக்கால், மற்றும் எடுப்பது ஓர் கூடகாரத்திற்குத் துப்பு ஆகும்;-அஃதேபோல், பீடு இலாக்கண்ணும், பெரியார் பெருந் தகையர்;- ஈடு இல்லதற்கு இல்லை, பாடு. | |
|
உரை
|
|
|
|
|
97. | தழங்குரல் வானத்துத் தண் பெயல் பெற்றால், கிழங்குடைய எல்லாம் முளைக்கும், ஓர் ஆற்றான்; விழைந்தவரை வேறன்றிக் கொண்டு ஒழுகல் வேண்டா;- பழம் பகை நட்பு ஆதல் இல். | |
|
உரை
|
|
|
|
|
98. | வெள்ளம் பகை வரினும், வேறு இடத்தார் செய்வது என்? கள்ளம் உடைத்தாகிச் சார்ந்த கழி நட்பு- புள் ஒலிப் பொய்கைப் புனல் ஊர!-அஃது அன்றோ, உள் இல்லத்து உண்ட தனிசு. | |
|
உரை
|
|
|
|
|
99. | அடங்கி, அகப்பட ஐந்தினையும் காத்து, தொடங்கிய மூன்றினால் மாண்டு, ஈண்டு உடம்பு ஒழிய, செல்லும் வாய்க்கு ஏமம் சிறுகாலைச் செய்தாரே- கொல்லிமேல் கொட்டு வைத்தார். | |
|
உரை
|
|
|
|
|
100. | நல்கூர்ந்தவர்க்கு, நனி பெரியர் ஆயினார், செல் விருந்து ஆகிச் செலல் வேண்டா; ஒல்வது இறந்து அவர் செய்யும் வருத்தம்-குருவி குறங்கு அறுப்பச் சோரும் குடர். | |
|
உரை
|
|
|
|