தொடக்கம் |
|
|
101. | பரியப் படுமவர் பண்பு இலரேனும், திரியப் பெறுபவோ சான்றோர்?-விரி திரைப் பார் எறியும் முந்நீர்த் துறைவ!-கடன் அன்றோ, ஊர் அறிய நட்டார்க்கு உணா? | |
|
உரை
|
|
|
|
|
102. | ‘எனக்குத் தகவு அன்றால்’ என்பதே நோக்கி, தனக்குக் கரி ஆவான் தானாய், தவற்றை நினைத்து, தன் கை குறைத்தான் தென்னவனும்;-காணார் எனச் செய்யார், மாணா வினை. | |
|
உரை
|
|
|
|
|
103. | நிரம்பி நிரையத்தைக் கண்டு, அந் நிரையம் வரம்பு இல் பெரியானும் புக்கான்; இரங்கார்,- கொடி ஆர மார்ப!-குடி கெட வந்தால், அடி கெட மன்றிவிடல். | |
|
உரை
|
|
|
|
|
104. | நல்லவும் தீயவும் நாடி, பிறர் உரைக்கும் நல்ல பிறவும் உணர்வாரை, கட்டுரையின் வல்லிதின் நாடி, வலிப்பதே-புல்லத்தைப் புல்லம் புறம் புல்லுமாறு. | |
|
உரை
|
|
|
|
|
105. | சுடப்பட்டு உயிர் உய்ந்த சோழன் மகனும், பிடர்த்தலைப் பேரானைப் பெற்று, கடைக்கால், செயிர் அறு செங்கோல் செலீஇயினான்;-இல்லை, உயிர் உடையார் எய்தா வினை. | |
|
உரை
|
|
|
|
|
106. | வாள் திறலானை வளைத்தார்கள், அஞ் ஞான்று, வீட்டிய சென்றார், விளங்கு ஒளி காட்ட, பொரு அறு தன்மை கண்டு, அஃது ஒழிந்தார்;-அஃதால், உருவு திரு ஊட்டுமாறு. | |
|
உரை
|
|
|
|
|
107. | பெற்றாலும் செல்வம், பிறர்க்கு ஈயார், தாம் துவ்வார், கற்றாரும் பற்றி இறுகுபவால்;-கற்றா வரம்பிடைப் பூ மேயும் வண் புனல் ஊர!- மரம் குறைப்ப மண்ணா, மயிர். | |
|
உரை
|
|
|
|
|
108. | உள்ளூரவரால் உணர்ந்தார் முதல் எனினும், எள்ளாமை வேண்டும்;-இலங்கிழாய்!-தள்ளாது அழுங்கல் முது பதி அங்காடி மேயும் பழங் கன்று ஏறு ஆதலும் உண்டு. | |
|
உரை
|
|
|
|
|
109. | மெய்யா உணரின், பிறர் பிறர்க்குச் செய்வது என்?- பை ஆர் அகல் அல்குல் பைந்தொடி!- எக்காலும் செய்யார் எனினும், தமர் செய்வர்; பெய்யுமாம், பெய்யாது எனினும், மழை. | |
|
உரை
|
|
|
|
|
110. | கூற்றம் உயிர் கொள்ளும் போழ்து, குறிப்பு அறிந்து மாற்றம் உடையாரை ஆராயாது; ஆற்றவும்,- முல்லை புரையும் முறுவலாய்!-செய்வது என், வல்லை, அரசு ஆட்கொளின்? | |
|
உரை
|
|
|
|