தொடக்கம் |
|
|
111. | நன்றே, ஒருவன்-துணைக்கோடல்; பாப்பு இடுக்கண் ஞெண்டேயும் பார்ப்பான்கண் தீர்த்தலான்,-விண் தோயும் குன்றக நல் நாட!-கூறுங்கால், இல்லையே, ஒன்றுக்கு உதவாத ஒன்று. | |
|
உரை
|
|
|
|
|
112. | ஆண்டு ஈண்டு என ஒன்றோ வேண்டா; அடைந்தாரை மாண்டிலர் என்றே மறுப்பக் கிடந்ததோ? பூண் தாங்கு இள முலைப் பொற்றொடீஇ!-பூண்ட பறை அறையாப் போயினார் இல். | |
|
உரை
|
|
|
|
|
113. | ‘இடையீடு உடையார் இவர் அவரோடு’ என்று, தலையாயார் ஆய்தந்தும் காணார்; கடையாயார் முன் நின்று கூறும் குறளை தெறிதலால்,- பின் இன்னா, பேதையார் நட்பு. | |
|
உரை
|
|
|
|
|
114. | தெற்ற ஒருவரைத் தீது உரை கண்டக்கால், இற்றே அவரைத் தெளியற்க; மற்றவர் யாவரே வேண்டினும், நன்கு ஒழுகார்;-கைக்குமே, தேவரே தின்னினும் வேம்பு. | |
|
உரை
|
|
|
|
|
115. | அகலம் உடைய அறிவுடையார் நாப்பண், புகல் அரியார் புக்கு, அவர் தாமே இகலினால் வீண் சேர்ந்த புன் சொல் விளம்பல்-அது அன்றோ, பாண் சேரிப் பல் கிழிக்குமாறு. | |
|
உரை
|
|
|
|
|
116. | ‘அமர் விலங்கி, ஆற்ற அறியவும்பட்டார் எமர், மேலை இன்னரால்; யார்க்கு உரைத்தும்’ என்று, தமர் மறையாக் கூழ் உண்டு சேறல் அதுவே- மகன் மறையாத் தாய் வாழுமாறு. | |
|
உரை
|
|
|
|
|
117. | தாயானும், தந்தையாலானும், மிகவு இன்றி, வாயின் மீக்கூறுமவர்களை ஏத்துதல்- நோய் இன்று எனினும், அடுப்பின் கடை முடங்கும் நாயைப் புலியாம் எனல். | |
|
உரை
|
|
|
|
|
118. | கட்டு உடைத்தாகக் கருமம் செய வைப்பின், பட்டு உண்டு ஆங்கு ஓடும் பரியாரை வையற்க!- தொட்டாரை ஒட்டாப் பொருள் இல்லை; இல்லையே, அட்டாரை ஒட்டாக் கலம். | |
|
உரை
|
|
|
|
|
119. | ஒற்கம் தாம் உற்ற இடத்தும், உயர்ந்தவர் நிற்பவே, நின்ற நிலையின்மேல்;-வற்பத்தால் தன்மேல் நலியும் பசி பெரிதுஆயினும், புல் மேயாது ஆகும், புலி. | |
|
உரை
|
|
|
|
|
120. | பல் நாளும் நின்ற இடத்தும், கணி வேங்கை நல் நாளே நாடி மலர்தலால்,-மன்னர் உவப்ப வழிபட்டு ஒழுகினும், செல்வம் தொகற்பால போழ்தே தொகும். | |
|
உரை
|
|
|
|