தொடக்கம் |
|
|
121. | காடு உறை வாழ்க்கைக் கடு வினை மாக்களை நாடு உறைய நல்கினும், நன்கு ஒழுகார்;-நாள்தொறும் கையுளதாகிவிடினும், குறும்பூழ்க்குச் செய் உளது ஆகும், மனம். | |
|
உரை
|
|
|
|
|
122. | விலங்கேயும் தம்மோடு உடன் உறைதல் மேவும்; கலந்தாரைக் கைவிடுதல் ஒல்லா;-இலங்கு அருவி தாஅய் இழியும் மலை நாட!-இன்னாதே, பேஎயொடானும் பிரிவு. | |
|
உரை
|
|
|
|
|
123. | கருவினுள் கொண்டு கலந்தாரும், தம்முள் ஒருவழி நீடி உறைதலோ, துன்பம்;- பொரு கடல் தண் சேர்ப்ப!-பூந் தாமரைமேல் திருவொடும் இன்னாது, துச்சு. | |
|
உரை
|
|
|
|
|
124. | தம் குற்றம் நீக்கலர் ஆகி, பிறர் குற்றம் எங்கெங்கும் நீக்கற்கு இடை புகுதல்-எங்கும் வியன் உலகில் வெள்ளாடு தன் வளி தீராது, அயல் வளி தீர்த்துவிடல். | |
|
உரை
|
|
|
|
|
125. | உரை சான்ற சான்றோர் ஒடுங்கி உறைய, நிரை உள்ளர் அல்லார் நிமிர்ந்து பெருகல்,- வரை தாழ் இலங்கு அருவி வெற்ப!அதுவே, சுரை ஆழ, அம்மி மிதப்பு. | |
|
உரை
|
|
|
|
|
126. | ஆற்றப் பெரியார் பகை வேண்டிக் கொள்ளற்க! போற்றாது கொண்டு அரக்கன் போருள் அகப்பட்டானால்;- நோற்ற பெருமை உடையாரும், கூற்றம் புறம் கொம்மை கொட்டினார் இல். | |
|
உரை
|
|
|
|
|
127. | ஆகும் சமயத்தார்க்கு ஆள்வினையும் வேண்டாவாம்; போகும் பொறியார் புரிவும் பயம் இன்றே;- ஏ கல் மலை நாட!-என் செய்து, ஆங்கு என் பெறினும், ஆகாதார்க்கு ஆகுவது இல். | |
|
உரை
|
|
|
|
|
128. | காட்டிக் கருமம் கயவர்மேல் வைத்து, ‘அவர் ஆக்குவர் ஆற்ற எமக்கு!’ என்று அமர்ந்து இருத்தல்,- மாப் புரை நோக்கின் மயில் அன்னாய்!-பூசையைக் காப்பிடுதல், புன் மீன் தலை. | |
|
உரை
|
|
|
|
|
129. | தொன்மையின் மாண்ட துணிவு ஒன்றும் இல்லாதார் நன்மையின் மாண்ட பொருள் பெறுதல்,-இன் ஒலி நீர் கல் மேல் இலங்கு மலை நாட!-மாக் காய்த்துத் தன்மேல் குணில் கொள்ளுமாறு. | |
|
உரை
|
|
|
|
|
130. | நெடியது காண்கலாய்; நீ அளியை;-நெஞ்சே!- கொடியது கூறினாய் மன்ற;- அடியுளே, முற்பகல் கண்டான் பிறன் கேடு, தன் கேடு பிற்பகல் கண்டுவிடும். | |
|
உரை
|
|
|
|