தொடக்கம் |
|
|
131. | செம்மாந்து செல்லும் செறுநரை அட்டவர், தம்மேல் புகழ் பிறர் பாராட்ட, தம்மேல் தாம் வீரம் சொல்லாமையே வீழ்க!- களிப்பினும் சோரப் பொதியாதவாறு. | |
|
உரை
|
|
|
|
|
132. | செய்த கருமம் சிறிதானும் கைகூடா; மெய்யா உணரவும் தாம் படார்; எய்த நலத் தகத் தம்மைப் புகழ்தல்-'புலத்தகத்துப் புள் அரைக்கால் விற்பேம்’ எனல். | |
|
உரை
|
|
|
|
|
133. | ‘பண்டு இன்னர்’ என்று தமரையும், தம்மையும், கொண்ட வகையால் குறை தீர நோக்கியக்கால், விண்டவரோடு ஒன்றிப் புறன் உரைப்பின்,-அஃது அன்றோ, உண்ட இல் தீ இடுமாறு. | |
|
உரை
|
|
|
|
|
134. | பல நாளும் ஆற்றார் எனினும், அறத்தைச் சில நாள் சிறந்தவற்றால் செய்க!-முலை நெருங்கி நைவது போலும் நுசுப்பினாய்!-நல்லறம் செய்வது செய்யாது, கேள். | |
|
உரை
|
|
|
|
|
135. | தெரியாதவர் தம் திறன் இல் சொல் கேட்டால், பரியாதார் போல இருக்க! பரிவு இல்லா வம்பலர் வாயை அவிப்பான் புகுவாரே- அம்பலம் தாழ்க் கூட்டுவார். | |
|
உரை
|
|
|
|
|
136. | அரு விலை மாண் கலனும், ஆன்ற பொருளும், திரு உடையராயின், திரிந்தும் வருமால்;- பெரு வரை நாட!-பிரிவு இன்று, அதனால்; திருவினும் திட்பமே நன்று. | |
|
உரை
|
|
|
|
|
137. | தோற்றம் அரிது ஆய மக்கட் பிறப்பினால், ஆற்றும் துணையும் அறம் செய்க!-மாற்று இன்றி, அஞ்சும் பிணி, மூப்பு, அருங் கூற்றுடன் இயைந்து, துஞ்ச வருமே, துயக்கு! | |
|
உரை
|
|
|
|
|
138. | கற்றானும், கற்றார் வாய்க் கேட்டானும், அல்லாதான் தெற்ற உணரான், பொருள்களை; எற்றே, அறிவு இலான் மெய்த் தலைப்பாடு? பிறிது இல்லை;- நாவற்கீழ்ப் பெற்ற கனி. | |
|
உரை
|
|
|
|
|
139. | பெரியாரைச் சார்ந்தார்மேல், பேதைமை கந்தா, சிறியார் முரண் கொண்டு ஒழுகல், வெறி ஒலிக்கு ஓநாய் இனம் வெரூஉம் வெற்ப!-புலம் புகின், தீ நாய் எடுப்புமாம் எண்கு. | |
|
உரை
|
|
|
|
|
140. | மரம்போல் வலிய மனத்தாரை முன் நின்று இரந்தார் பெறுவது ஒன்று இல்லை;-குரங்கு ஊசல் வள்ளியின் ஆடும் மலை நாட!-அஃது அன்றோ, பள்ளியுள் ஐயம் புகல். | |
|
உரை
|
|
|
|