தொடக்கம் |
|
|
161. | ‘இனி, யாரும் இல்லாதார் எம்மின் பிறர் யார்? தனியேம் யாம்!’ என்று ஒருவர் தாம் மடியல் வேண்டா; முனிவு இலராகி முயல்க!-முனியாதார் முன்னியது எய்தாமை இல். | |
|
உரை
|
|
|
|
|
162. | கூஉய்க் கொடுப்பது ஒன்று இல் எனினும், சார்ந்தார்க்குத் தூஉய்ப் பயின்றாரே துன்பம் துடைக்கிற்பார்;- வாய்ப்பத் தான் மாழ்கியக்கண்ணும், பெருங் குதிரை, யாப்புள், வேறு ஆகிவிடும். | |
|
உரை
|
|
|
|
|
163. | தோற்றம் பெரிய நசையினார், அந் நசை ஆற்றாதவரை அடைந்து ஒழுகல்,-ஆற்றின் கயல் புரை உண்கண் கனங்குழாய்!-அஃதால், உயவுநெய்யுள் குளிக்குமாறு. | |
|
உரை
|
|
|
|
|
164. | செறலின் கொலை புரிந்து, சேண் உவப்பர் ஆகி, அறிவின் அருள் புரிந்து செல்லார், பிறிதின் உயிர் செகுத்து, ஊன் துய்த்து, ஒழுகுதல்-ஓம்பார், தயிர் சிதைத்து, மற்றொன்று அடல். | |
|
உரை
|
|
|
|
|
165. | மறு மனத்தான் அல்லாத மா நலத்த வேந்தன் உறு மனத்தான் ஆகி ஒழுகின்,-தெறு மனத்தார் பாயிரம் கூறிப் படை தொக்கால் என் செய்ப?- ஆயிரம் காக்கைக்கு ஓர் கல். | |
|
உரை
|
|
|
|
|
166. | ‘தோற்றத்தால் பொல்லார்; துணை இலார்; நல்கூர்ந்தார்; மாற்றத்தால் செற்றார்’ என, வலியார் ஆட்டியக்கால்,- ஆற்றாது அவர் அழுத கண்ணீரவை அவர்க்குக் கூற்றமாய் வீழ்ந்து விடும். | |
|
உரை
|
|
|
|
|
167. | உடுக்கை, மருந்து, உறையுள், உண்டியோடு, இன்ன கொடுத்து, குறை தீர்த்தல் ஆற்றி விடுத்து, இன்சொல் ஈயாமை என்ப-எருமை எறிந்து, ஒருவர் காயக்கு உலோபிக்குமாறு. | |
|
உரை
|
|
|
|
|
168. | ஓர்த்த கருத்தும் உலகும் உணராத மூர்க்கற்கு உறுதி மொழியற்க! மூர்க்கன் தான் கொண்டதே கொண்டு, விடான் ஆகும்;-ஆகாதே, உண்டது நீலம் பிறிது. | |
|
உரை
|
|
|
|
|
169. | கரப்புடையார் வைத்த, கடையும் உதவா, துரப்புடைய மன்னர்க்கே துப்புரவு; அது அல்லால், நிரப்பு இடும்பை மிக்கார்க்கு உதவ ஒன்று ஈதல்- சுரத்திடைத் தீரப் பெயல். | |
|
உரை
|
|
|
|
|
170. | உரிஞ்சி நடப்பாரை, உள் அடி நோவ, நெருஞ்சியும் செய்வது ஒன்று இல்லை;-செருந்தி இருங் கழித் தாழும் எறி கடல் தண் சேர்ப்ப!- பெரும் பழியும் பேணாதார்க்கு இல். | |
|
உரை
|
|
|
|