171. மாரி ஒன்று இன்றி வறந்திருந்த காலத்தும்,
பாரி மட மகள், பாண் மகற்கு, நீர் உலையுள்
பொன், திறந்து, கொண்டு, புகாவாக நல்கினாள்;-
ஒன்று உறா முன்றிலோ இல்.
உரை
   
172. உறு மகன் ஆக ஒருவனை நாட்டி,
பெறு மாற்றம் இன்றி, பெயர்த்தே ஒழிதல்
சிறுமைக்கு அமைந்தது ஓர் செய்கை;-அதுவே,
குறுமக்கள் காவு நடல்.
உரை
   
173. அல்லது செய்வார் அரும் பொருள் ஆக்கத்தை
நல்லது செய்வார் நயப்பவோ?-ஒல் ஒலி நீர்
பாய்வதே போலும் துறைவ! கேள்;-தீயன
ஆவதே போன்று கெடும்.
உரை
   
174. ‘யாம் தீய செய்த மலை மறைத்தது’ என்று எண்ணி,
தாம் தீயார் தம் தீமை தேற்றாரால்;-ஆம்பல்
மண இல் கமழும் மலி திரைச் சேர்ப்ப!-
கணையிலும் கூரியவாம் கண்.
உரை
   
175. வேளாண்மை செய்து, விருந்து ஓம்பி, வெஞ் சமத்து
வாள் ஆண்மையானும் வலியராய், தாளாண்மை
தாழ்க்கும் மடி கோள் இலராய்,-வருந்தாதார்
வாழ்க்கை திருந்துதல் இன்று.
உரை
   
176. ‘உரைத்தவர் நாவோ பருந்து எறியாது’ என்று,
சிலைத்து எழுந்து, செம்மாப்பவரே-மலைத்தால்,
இழைத்தது இகவாதவரைக் கனற்றி,
பலிப் புறத்து உண்பர் உணா.
உரை
   
177. களமர் பலரானும் கள்ளம் படினும்,
வளம் மிக்கார் செல்வம் வருந்தா;-விளை நெல்
அரிநர் அணை திறக்கும் ஊர!-அறுமோ,
நரி நக்கிற்று என்று கடல்?
உரை
   
178. ஆண்தகை மன்னரைச் சேர்ந்தார் தாம் அலவுறினும்,
ஆண்டு ஒன்று வேண்டுதும் என்பது உரையற்க!-
பூண் தகு மார்ப!-பொருள் தக்கார் வேண்டாமை
வேண்டியது எல்லாம் தரும்.
உரை
   
179. யாவரேயானும், இழந்த பொருள் உடையார்,
தேவரே ஆயினும், தீங்கு ஓர்ப்பர்;-பாவை
படத் தோன்றும் நல்லாய்!-நெடு வேல் கெடுத்தான்
குடத்துள்ளும் நாடிவிடும்.
உரை
   
180. வெள்ள மாண்பு எல்லாம் உடைய தமர் இருப்ப,
உள்ள மாண்பு இல்லா ஒருவரைத் தெள்ளி,
மறைக்கண் பிரித்து, அவரை மாற்றாது ஒழிதல்-
பறைக்கண் கடிப்பு இடுமாறு.
உரை