181. வெற்றி வேல் வேந்தன் வியங்கொண்டால், ‘யாம் ஒன்றும்
பெற்றிலேம்’ என்பது பேதைமையே; மற்று அதனை
ஐயம் இலர் ஆகிச் செய்க!-அது அன்றோ,
‘செய்க!’ என்றான், ‘உண்க!’ என்னுமாறு.
உரை
   
182. கொழித்துக் கொளப்பட்ட நண்பினவரைப்
பழித்துப் பலர் நடுவண் சொல்லாடார்; என்கொல்?-
விழித்து அலரும் நெய்தல் துறைவ!-உரையார்,
இழித்தக்க காணின், கனா.
உரை
   
183. வளமையும், தேசும், வலியும், வனப்பும்,
இளமையும், இற்பிறப்பும், எல்லாம் உளவா,
மதித்து அஞ்சி மாறும் அஃது இன்மையால்,-கூற்றம்
குதித்து உய்ந்து அறிவாரோ இல்.
உரை
   
184. பொல்லாத சொல்லி, மறைந்து ஒழுகும் பேதை, தன்
சொல்லாலே தன்னைத் துயர்ப்படுக்கும்;-நல்லாய்!-
மணலுள் முழுகி மறைந்து கிடக்கும்
நுணலும் தன் வாயால் கெடும்.
உரை
   
185. அகத்தால் அழிவு பெரிது ஆயக்கண்ணும்,
புறத்தால் பொலிவுறல் வேண்டும்;-எனைத்தும்
படுக்கை இலராயக்கண்ணும், உடுத்தாரை
உண்டி வினவுவார் இல்.
உரை
   
186. கற்றது ஒன்று இன்றிவிடினும், கருமத்தை
அற்றம் முடிப்பான் அறிவுடையான்; உற்று இயம்பும்;-
நீத்த நீர்ச் சேர்ப்ப!-இளையானே ஆயினும்,
மூத்தானே, ஆடு மகன்.
உரை
   
187. செருக்குடை மன்னர் இடைப் புக்கு, அவருள்
ஒருத்தற்கு உதவாத சொல்லின், தனக்குத்
திருத்தலும் ஆகாது, தீது ஆம்;-அதுவே
எருத்திடை வைக்கோல் தினல்.
உரை
   
188. இம்மைப் பழியும், மறுமைக்குப் பாவமும்,
தம்மைப் பிரியார் தமர்போல் அடைந்தாரின்,
செம்மைப் பகை கொண்டு சேராதார் தீயரோ?-
மைம்மைப்பின் நன்று, குருடு.
உரை
   
189. எய்தா நகைச் சொல் எடுத்து உரைக்கப்பட்டவர்
வைதாராக் கொண்டு விடுவர்மன்; அஃதால்-
புனல் பொய்கை ஊர!-விளக்கு எலி கொண்டு
தனக்கு நோய் செய்துவிடல்.
உரை
   
190. தூய்மை மனத்தவர், தோழர் மனையகத்தும்,
தாமே தமியர் புகல் வேண்டா; தீமையான்
ஊர் மிகின், இல்லை, கரியே;-ஒலித்து உடன்
நீர் மிகின், இல்லை, சிறை.
உரை