தொடக்கம் |
|
|
191. | ‘பண்டு உருத்துச் செய்த பழ வினை வந்து, எம்மை இன்று ஒறுக்கின்றது’ என நினையார், துன்புறுக்கும் மேவலரை நோவது என்?-மின் நேர் மருங்குலாய்!- ஏவலாள் ஊரும் சுடும். | |
|
உரை
|
|
|
|
|
192. | கற்று ஆற்றுவாரைக் கறுப்பித்து, கல்லாதார் சொல் தாற்றுக் கொண்டு சுனைத்து எழுதல் எற்று எனின்,- தானும் நடவான் முடவன், பிடிப்பூணி, யானையொடு ஆடல் உறவு. | |
|
உரை
|
|
|
|
|
193. | தீப் பால் வினையினைத் தீரவும் அஞ்சாராய்க் காப்பாரே போன்று உரைத்த பொய், குறளை, ஏய்ப்பார், முன் சொல்லொடு ஒருப்படார், சோர்வு இன்றி மாறுபவே- வில்லொடு காக்கையே போன்று. | |
|
உரை
|
|
|
|
|
194. | நெடுங் காலம் வந்தார் நெறி இன்மை கண்டு, நடுங்கிப் பெரிதும் நலிவார், பெரியர்;- அடும்பு ஆர் அணி கானல் சேர்ப்ப!-கெடுமே, கொடும்பாடு உடையான் குடி. | |
|
உரை
|
|
|
|
|
195. | நீர்த்து அன்று ஒருவர் நெறி அன்றிக் கொண்டக்கால், பேர்த்துத் தெருட்டல் பெரியார்க்கும் ஆகாதே;- கூர்த்த நுண் கேள்வி அறிவுடையார்க்கு ஆயினும், ஓர்த்தது இசைக்கும், பறை. | |
|
உரை
|
|
|
|
|
196. | புரை இன்றி நட்டார்க்கு நட்டார் உரைத்த உரையும் பொருள் முடிவும் ஒன்றால்; உரை பிறிது கொண்டு எடுத்துக் கூறல்,-கொடுங் கழித் தண் சேர்ப்ப!- ஒன்று எற்றி வெண்படைக்கோள் ஒன்று. | |
|
உரை
|
|
|
|
|
197. | பட்ட வகையால் பலரும் வருந்தாமல் கட்டு உடைத்தாகக் கருதிய நல்லறம், முட்டு உடைத்தாகி, இடை வீழ்ந்து ஒழிதலின்,- நட்டு அறான் ஆதலே நன்று. | |
|
உரை
|
|
|
|
|
198. | ‘இறப்ப எமக்கு ஈது இளிவரவு!’ என்னார், பிறப்பின் சிறியாரைச் சென்று, பிறப்பினால் சாலவும் மிக்கவர் சார்ந்து அடைந்து வாழ்பவே- தால அடைக்கலமே போன்று. | |
|
உரை
|
|
|
|
|
199. | தக்கம் இல் செய்கைப் பொருள் பெற்றால், அப் பொருள் தொக்க வகையும் முதலும் அது ஆனால், ‘மிக்க வகையால் அறம் செய்!’ என, வெகுடல்,- அக்காரம் பால் செருக்குமாறு. | |
|
உரை
|
|
|
|
|
200. | உடைப் பெருஞ் செல்வத்து உயர்ந்த பெருமை, அடக்கம் இல் உள்ளத்தன் ஆகி, நடக்கையின் ஒள்ளியன் அல்லான்மேல் வைத்தல்-குரங்கின் கைக் கொள்ளி கொடுத்துவிடல். | |
|
உரை
|
|
|
|