தொடக்கம் |
|
|
221. | முன்னும் ஒரு கால் பிழைப்பு ஆன்றார் ஆற்றவும், பின்னும் பிழைப்பப் பொறுப்பவோ?-இன் இசை யாழின் வண்டு ஆர்க்கும் புனல் ஊர!-ஈனுமோ, வாழை இரு கால் குலை? | |
|
உரை
|
|
|
|
|
222. | தொடித் தோள் மடவார் துணை முலை ஆகம் மடுத்து, அவர் மார்பில் மகிழ்நன் மடுப்ப, நெறி அல்ல சொல்லல் நீ, பாண!-அறி துயில் ஆர்க்கும் எடுப்பல் அரிது. | |
|
உரை
|
|
|
|
|
223. | ஆணம் உடைய அறிவினார் தம் நலம் மானும் அறிவினவரைத் தலைப்படுத்தல்,- மான் அமர்க் கண்ணாய்!-மறம் கெழு மா மன்னர், யானையால் யானை யாத்தற்று. | |
|
உரை
|
|
|
|
|
224. | தருக்கி ஒழுகித் தகவு அல்ல செய்தும், பெருக்க மதித்தபின் பேணாத செய்தும், கரப்புடை உள்ளம் கனற்றுபவரே- செருப்பிடைப் பட்ட பரல். | |
|
உரை
|
|
|
|
|
225. | விடலைமை செய்ய வெருண்டு அகன்று, நில்லாது, உடல் அரு மன்னர் உவப்ப ஒழுகின்,- மடல் அணி பெண்ணை மலி திரைச் சேர்ப்ப!- கடல் படா எல்லாம் படும். | |
|
உரை
|
|
|
|
|
226. | செயிர் அறு செங்கோல் சின வேந்தன் செய்கை பயிர் அறு பக்கத்தார் கொள்வர்;-துகிர் புரையும் செவ் வாய் மணி முறுவல் சின்மொழி!-செய்தானை ஒவ்வாத பாவையோ இல். | |
|
உரை
|
|
|
|
|
227. | புரையக் கலந்தவர்கண்ணும் கருமம் உரையின் வழுவாது உவப்பவே கொள்க!- வரையக நாட!-விரையின், கருமம் சிதையும்; இடர் ஆய்விடும். | |
|
உரை
|
|
|
|
|
228. | கற்றார் பலரைத் தன் கண்ணாக இல்லாதான் உற்று இடர்ப்பட்ட பொழுதின்கண், தேற்றம்- மரையா துணை பயிரும் மா மலை நாட!- சுரையாழ் நரம்பு அறுத்தற்று. | |
|
உரை
|
|
|
|
|
229. | நயவர நட்டு ஒழுகுவாரும் தாம், கேட்டது உயவாது ஒழிவார் ஒருவரும் இல்லை;- புயல் அமை கூந்தல் பொலந்தொடீஇ!-சான்றோர் கயவர்க்கு உரையார், மறை. | |
|
உரை
|
|
|
|
|
230. | மனம் கொண்டக்கண்ணும் மருவு இல செய்யார், கனம் கொண்டு உரைத்தவை காக்கவே வேண்டும்; சனங்கள் உவப்பன, செய்யாவும், செய்க!- இனம் கழு ஏற்றினார் இல். | |
|
உரை
|
|
|
|