தொடக்கம் |
|
|
231. | தார் ஏற்ற நீள் மார்பின் தம் இறைவன் நோக்கியக்கால், ‘போர் ஏற்றும்’ என்பார், பொது ஆக்கல் வேண்டுமோ? யார் மேற்றாக் கொள்ளினும் கொண்டீக! காணுங்கால், ஊர் மேற்று, அமணர்க்கும் ஓடு. | |
|
உரை
|
|
|
|
|
232. | தமரேயும் தம்மைப் புகழ்ந்து உரைக்கும் போழ்தின், அமராததனை அகற்றலே வேண்டும்;- அமை ஆரும் வெற்ப!-அணியாரே தம்மை, தமவேயும், கொள்ளாக் கலம். | |
|
உரை
|
|
|
|
|
233. | ஆமாலோ என்று பெரியாரை முன் நின்று தாமாச் சிறியார் தறுகண்மை செய்து ஒழுகல்,- போம் ஆறு அறியா, புலன் மயங்கி, ஊர் புக்கு, சாம் மா கண் காணாதவாறு. | |
|
உரை
|
|
|
|
|
234. | தீயன அல்ல செயினும், திறல் வேந்தன் காய்வன செய்து ஒழுகார், கற்று அறிந்தார்;-காயும் புலி முன்னர்ப் புல்வாய்க்குப் போக்கு இல்; அதுவே, வலி முன்னர் வைப் பாரம் இல். | |
|
உரை
|
|
|
|
|
235. | சிறிது ஆய கூழ் பெற்று, செல்வரைச் சேர்ந்தார், பெரிது ஆய கூழும் பெறுவர்;-அரிது ஆம் இடத்துள் ஒருவன் இருப்புழிப் பெற்றால், கிடப்புழியும் பெற்றுவிடும். | |
|
உரை
|
|
|
|
|
236. | இனியாரை உற்ற இடர் தீர் உபாயம் முனியார் செயினும், மொழியால் முடியா;- துனியால் திரை உலாம் தூங்கு நீர்ச் சேர்ப்ப!- பனியால் குளம் நிறைதல் இல். | |
|
உரை
|
|
|
|
|
237. | முயறலே வேண்டா; முனிவரையானும் இயல்பு இன்னர் என்பது இனத்தான் அறிக!- கயல் இகல் உண் கண்ணாய்!-கரியவரோ வேண்டா; அயல் அறியா அட்டூணோ இல். | |
|
உரை
|
|
|
|
|
238. | நாவின் இரந்தார் குறை அறிந்தும் தாம் உடைய மாவினை மாணப் பொதிகிற்பார், தீவினை அஞ்சில் என்? அஞ்சாவிடில் என்?-குருட்டுக் கண் துஞ்சில் என்? துஞ்சாக்கால் என்? | |
|
உரை
|
|
|
|
|
239. | உற்றால், இறைவற்கு உடம்பு கொடுக்கிற்பான், மற்றவற்கு ஒன்னாரோடு ஒன்றுமோ?-தெற்ற முரண் கொண்டு மாறு ஆய உண்ணுமோ? உண்ணா, இரண்டு ஏறு ஒரு துறையில் நீர். | |
|
உரை
|
|
|
|
|
240. | மறாஅதவனும், பலர் ஒன்று இரந்தால், பெறாஅஅன் பேதுறுதல் எண்ணி, பொறாஅன், கரந்து உள்ளதூஉம் மறைக்கும்; அதனால், இரந்து ஊட்குப் பன்மையோ தீது. | |
|
உரை
|
|
|
|