241. மொய் கொண்டு எழுந்த அமரகத்து, மாற்றார் வாய்ப்
பொய் கொண்டு, அறைபோய்த் திரிபவர்க்கு என்கொலாம்?-
மை உண்டு அமர்த்த கண் மாணிழாய்!-சான்றவர்,
கை உண்டும், கூறுவர் மெய்.
உரை
   
242. பொருத்தம் அழியாத பூந் தண் தார் மன்னர்
அருத்தம், அடி நிழலாரை வருத்தாது,
கொண்டாரும் போலாதே, கோடல்! அது அன்றோ,
வண்டு தாது உண்டுவிடல்.
உரை
   
243. கற்று அறிந்தார் கண்ட அடக்கம்; அறியாதார்
பொச்சாந்து தம்மைப் புகழ்ந்து உரைப்பர், தெற்ற;-
அறை கல் அருவி அணி மலை நாட!-
நிறை குடம் நீர் தளும்பல் இல்.
உரை
   
244. தெரிவு உடையாரோடு, தெரிந்து உணர்ந்து நின்றார்,
பரியாரிடைப் புகார், பண்பு அறிவார், மன்ற;-
விரியா இமிழ் திரை வீங்கு நீர்ச் சேர்ப்ப!-
அரிவாரைக் காட்டார், நரி.
உரை
   
245. தம் தொழில் ஆற்றும் தகைமையார் செய்வன,
வெந் தொழிலர் ஆய வெகுளிகட்குக் கூடுமோ?-
மைந்து இறைகொண்ட மலை மார்ப!-ஆகுமோ,
நந்து உழுத எல்லாம் கணக்கு?
உரை
   
246. ‘நினைத்தது இது’ என்று, அந் நீர்மையைப் பார்த்து,
மனத்தது அறிந்து ஈவார் மாண்டார்;-புனத்த
குடிஞை இரட்டும் குளிர் வரை நாட!-
கடிஞையுள் கல் இடுவார் இல்.
உரை
   
247. தம் தீமை இல்லவர், நட்டவர் தீமையையும்,
‘எம் தீமை’ என்றே உணர்ப, தாம்;-அம் தண்
பொரு திரை வந்து உலாம் பொங்கு நீர்ச் சேர்ப்ப!-
ஒருவர் பொறை, இருவர் நட்பு.
உரை
   
248. அம் கோல் அவிர்தொடி!-ஆழியான் ஆயினும்,
செங்கோலன் அல்லாக்கால், சேர்ந்தாரும் எள்ளுவர்,
வெங்கோன்மை வேந்தர்கண் வேண்டும் சிறிது எனினும்;
தண் கோல் எடுப்புமாம் மொய்.
உரை
   
249. நல் அவை கண்டக்கால் நாச் சுருட்டி, நன்று உணராப்
புல் அவையுள் தம்மைப் புகழ்ந்து உரைத்தல்,-புல்லார்-
புடைத் தறுகண் அஞ்சுவான், இல்லுள், வில் ஏற்றி,
இடைக் கலத்து எய்துவிடல்.
உரை
   
250. தாக்குற்ற போழ்தில் தமரேபோல் நன்கு உரைத்து,
போக்குற்ற போழ்தில் புறன் அழீஇ, மேன்மைக்கண்
நோக்கு அற்றவரைப் பழித்தல் என்? என்னானும்,
மூக்கு அற்றதற்கு இல், பழி.
உரை