தொடக்கம் |
|
|
251. | கண்டு அறியார் போல்வர் கெழீஇயின்மை செய்வாரைப் பண்டு அறிவார் போலாது, தாமும் அவரேயாய், விண்டு ஒரீஇ, மாற்றிவிடுதல்!-அது அன்றோ, விண்டற்கு விண்டல் மருந்து. | |
|
உரை
|
|
|
|
|
252. | ‘ஆற்றார் இவர்’ என்று, அடைந்த தமரையும், தோற்ற, தாம் எள்ளி நலியற்க!-போற்றான், கடை அடைத்து வைத்து, புடைத்தக்கால், நாயும் உடையானைக் கௌவிவிடும். | |
|
உரை
|
|
|
|
|
253. | ‘நிலைஇய பண்பு இலார் நேர் அல்லர்’ என்று, ஒன்று உளைய உரையாது, உறுதியே கொள்க!- வளை ஒலி ஐம்பாலாய்!-வாங்கியிருந்து, தொளை எண்ணார், அப்பம் தின்பார். | |
|
உரை
|
|
|
|
|
254. | வன் சார்பு உடையர் எனினும், வலி பெய்து, தம் சார்பு இலாதாரைத் தேசு ஊன்றல் ஆகுமோ?- மஞ்சு சூழ் சோலை மலை நாட!-யார்க்கானும் அஞ்சுவார்க்கு இல்லை, அரண். | |
|
உரை
|
|
|
|
|
255. | சொல்லாமை நோக்கிக் குறிப்பு அறியும் பண்பின் தம் இல்லாளே வந்த விருந்து ஓம்பி, செல்வத்து இடர் இன்றி ஏமார்ந்திருந்தாரே, என்றும் கடலுள் துலாம் பண்ணினார். | |
|
உரை
|
|
|
|
|
256. | மாணாப் பகைவரை மாறு ஒறுக்கல்லாதார் பேணாது உரைக்கும் உரை கேட்டு உவந்ததுபோல்,- ஊண் ஆர்ந்து, உதவுவது ஒன்று இல் எனினும், கள்ளினைக் காணாக் களிக்கும், களி. | |
|
உரை
|
|
|
|
|
257. | அன்பு அறிந்தபின் அல்லால், யார் யார்க்கும், தம் மறையை முன் பிறர்க்கு ஓடி மொழியற்க!-தின்குறுவான் கொல்வாங்குக் கொன்றபின் அல்லது, உயக் கொண்டு, புல்வாய் வழிப்படுவார் இல். | |
|
உரை
|
|
|
|
|
258. | விதிப் பட்ட நூல் உணர்ந்து வேற்றுமை இல்லார், கதிப்பவர் நூலினைக் கையிகந்தார் ஆகி, பதிப்பட வாழ்வார் பழி ஆய செய்தல்,- மதிப்புறத்துப் பட்ட மறு. | |
|
உரை
|
|
|
|
|
259. | நோக்கி இருந்தார் இமைக்கும் அளவின்கண், ஓப்பப் படினும், உணங்கலைப் புள் கவரும்;- போற்றிப் புறந்தந்தக்கண்ணும், பொருளினைக் காப்பாரின் பார்ப்பார் மிகும். | |
|
உரை
|
|
|
|
|
260. | ஒக்கும் வகையால் உடன் பொரும் சூதின்கண் பக்கத்து ஒருவன், ஒருவன்பால் பட்டிருக்கும்;- மிக்க சிறப்பினர் ஆயினும், தாயர்க்கு மக்களுள் பக்கமோ வேறு. | |
|
உரை
|
|
|
|