தொடக்கம் |
|
|
261. | மாய்வதன் முன்னே, வகைப்பட்ட நல் வினையை ஆய்வு இன்றிச் செய்யாதார், பின்னை வழி நினைந்து, நோய் காண் பொழுதின், அறம் செய்வார்க் காணாமை, நாய் காணின் கல் காணாவாறு. | |
|
உரை
|
|
|
|
|
262. | கருந் தொழிலர் ஆய கடையாயார் தம்மேல் பெரும் பழி ஏறுவ பேணார்;-இரும் புன்னை புன் புலால் தீர்க்கும் துறைவ!-மற்று அஞ்சாதே, தின்பது அழுவதன்கண். | |
|
உரை
|
|
|
|
|
263. | அகம் தூய்மை இல்லாரை ஆற்றப் பெருக்கி, இகந்துழி விட்டிருப்பின், அஃதால்-இகந்து, நினைந்து தெரியானாய், நீள் கயத்துள், ஆமை, ‘நனைந்து வா’ என்று விடல். | |
|
உரை
|
|
|
|
|
264. | கல்வி அகலமும், கட்டுரை வாய்பாடும், கொல் சின வேந்தன் அவை காட்டும்;-மல்கி, தலைப்பெய்து இழிதரூஉம் தண் புனல் நீத்தம் மலைப் பெயல் காட்டும் துணை. | |
|
உரை
|
|
|
|
|
265. | நனி அஞ்சத்தக்கவை வந்தக்கால், தங்கண் துனி அஞ்சார் செய்வது உணர்வார்;-பனி அஞ்சி, வேழம் பிடி தழூஉம், வேய் சூழ், மலை நாட!- ஊழ் அம்பு வீழா, நிலத்து. | |
|
உரை
|
|
|
|
|
266. | வினைப் பயம் ஒன்று இன்றி, வேற்றுமை கொண்டு, நினைத்துப் பிறர் பனிப்ப செய்யாமை வேண்டும்;- புனப் பொன் அவிர் சுணங்கின் பூங் கொம்பர் அன்னாய்!- தனக்கு இன்னா, இன்னா பிறர்க்கு. | |
|
உரை
|
|
|
|
|
267. | ‘எங்கண் ஒன்று இல்லை; எமர் இல்லை’ என்று, ஒருவர் தங்கண் அழிவு தாம் செய்யற்க!-எங்கானும் நன்கு திரண்டு பெரியவாம், ஆற்றவும் முன் கை நெடியார்க்குத் தோள். | |
|
உரை
|
|
|
|
|
268. | ஆய்ந்த அறிவினர் அல்லாதார் புல்லுரைக்குக் காய்ந்து, எதிர் சொல்லுபவோ, கற்று அறிந்தார்?-தீம் தேன் முசுக் குத்தி நக்கும் மலை நாட!-தம்மைப் பசுக் குத்தின், குத்துவார் இல். | |
|
உரை
|
|
|
|
|
269. | அருள் உடையாரும், மற்று அல்லாதவரும், பொருள் உடையாரைப் புகழாதார் இல்லை;- பொரு படைக் கண்ணாய்!-அதுவால், திரு உடையார் பண்டம் இருவர் கொளல். | |
|
உரை
|
|
|
|
|
270. | நற்கு அறிவு இல்லாரை நாட்டவும் ஆகாதே, சொல் குறிகொண்டு துடி பண்ணுறுத்ததுபோல்;- வெற்பு அறைமேல் தாழும் விலங்கு அருவி நல் நாட!- கற்பறிவு போகா, கடை. | |
|
உரை
|
|
|
|