தொடக்கம் |
|
|
271. | அறிவினால் மாட்சி ஒன்று இல்லா ஒருவன் பிறிதினால் மாண்டது எவனாம்?-பொறியின் மணி பொன்னும், சாந்தமும், மாலையும், மற்று இன்ன அணி எல்லாம், ஆடையின் பின். | |
|
உரை
|
|
|
|
|
272. | எல்லை ஒன்று இன்றியே இன்னா செய்தாரையும், ஒல்லை வெகுளார், ‘உலகு ஆண்டும்!’ என்பவர்; சொல்லின் வளாஅய், தம் தாள் நிழற்கீழ்க் கொள்பவே, கொல்லையில் கூழ்-மரமே போன்று. | |
|
உரை
|
|
|
|
|
273. | எண்ணக் குறைபடாச் செல்வமும், இற்பிறப்பும், மன்னருடைய உடைமையும், மன்னரால் இன்னர் எனல் வேண்டா; இம்மைக்கும் உம்மைக்கும் தம்மை உடைமை தலை. | |
|
உரை
|
|
|
|
|
274. | செல்வத் துணைமையும், தம் வாழ்நாள் துணைமையும், தாம் தெள்ளி உணரார், சிறிதினால் செம்மாந்து, பள்ளிப்பால் வாழார், பதி மகிழ்ந்து வாழ்வாரே,- முள்ளித் தேன் உண்ணுமவர். | |
|
உரை
|
|
|
|
|
275. | நன்கு ஒன்று அறிபவர், நாழி கொடுப்பவர்க்கு என்றும் உறுதியே சூழ்க!-எறி திரை சென்று உலாம் சேர்ப்ப!-அது போல, நீர் போயும், ஒன்று இரண்டாம் வாணிகம் இல். | |
|
உரை
|
|
|
|
|
276. | சொல் எதிர்ந்து, தம்மை வழிபட்டு ஒழுகலராய், கல் எறிந்தாற் போலக் கலாம் தலைக்கொள்வாரை இல் இருந்து, ஆற்ற முனிவித்தல்,-உள் இருந்து, அச்சாணி தாம் கழிக்குமாறு. | |
|
உரை
|
|
|
|
|
277. | புன் சொல்லும் நன் சொல்லும் பொய் இன்று உணர்கிற்பார், வன் சொல் வழியராய் வாழ்தலும் உண்டாமோ?- புன் சொல் இடர்ப்படுப்பது அல்லால், ஒருவனை இன் சொல் இடர்ப்படுப்பது இல். | |
|
உரை
|
|
|
|
|
278. | நாடு அறியப்பட்ட பெருஞ் செல்வர், நல்கூர்ந்து வாடிய காலத்தும், வட்குபவோ?-வாடி, வலித்து, திரங்கி, கிடந்தேவிடினும், புலித் தலை நாய் மோத்தல் இல். | |
|
உரை
|
|
|
|
|
279. | விட்டுக் கருமம் செயவைத்த பின்னரும், முட்டாது அவரை வியங்கொளவேண்டுமால்;- தொட்டக்கால் மாழ்கும் தளிர்மேலே நிற்பினும், கொட்டாமல் செல்லாது, உளி. | |
|
உரை
|
|
|
|
|
280. | குரைத்துக் கொளப்பட்டார் கோள் இழுக்குப்பட்டு, புரைத்து எழுந்து போகினும் போவர்; அரக்கு இல்லுள் பொய் அற்ற ஐவரும் போயினார்;-இல்லையே, உய்வதற்கு உய்யா இடம். | |
|
உரை
|
|
|
|