தொடக்கம் |
|
|
281. | பொருந்தாதவரைப் பொருது அட்டக் கண்ணும், இருந்து அமையார் ஆகி, இறப்ப வெகுடல்,- விரிந்து அருவி வீழ்தரும் வெற்ப!-அதுவே, அரிந்து அரிகால் நீர்ப் படுக்குமாறு. | |
|
உரை
|
|
|
|
|
282. | உடையதனைக் காப்பான் உடையான்; அதுவே உடையானைக் காப்பதூஉம் ஆகும்;-அடையின், புதற்குப் புலியும் வலியே; புலிக்குப் புதலும் வலியாய்விடும். | |
|
உரை
|
|
|
|
|
283. | ஒற்கப்பட்டு ஆற்றார் உணர உரைத்தபின், நற் செய்கை செய்வார்போல் காட்டி, நசை அழுங்க, வற்கென்ற செய்கை அதுவால்-அவ் வாயுறைப் புல் கழுத்தில் யாத்துவிடல். | |
|
உரை
|
|
|
|
|
284. | காத்து, ஆற்றுகிற்பாரைக் கண்டால், எதிர் உரையார், பார்த்து ஆற்றாதாரைப் பரியாது மீதூர்தல் யாத்த தேசு இல்லார் படை ஆண்மை-நாவிதன் வாள் சேப்பிலைக்குக் கூர்த்துவிடல். | |
|
உரை
|
|
|
|
|
285. | காப்பான் மட மகள், காப்பான் கைப்பட்டிருந்தும், ‘மேய்ப்பு ஆட்டது’ என்று உண்ணாள் ஆயினாள்;-தீப் புகைபோல் மஞ்சு ஆடு வெற்ப!-மறைப்பினும், ஆகாதே, தம் சாதி மிக்குவிடும். | |
|
உரை
|
|
|
|
|
286. | விரும்பி அடைந்தார்க்கும், சுற்றத்தவர்க்கும், வருந்தும் பசி களையார், வம்பர்க்கு உதவல்,- இரும் பணை வில் வென்ற புருவத்தாய்!-ஆற்றக் கரும் பனை அன்னது உடைத்து. | |
|
உரை
|
|
|
|
|
287. | ஒளியாரை மீதூர்ந்து ஒழுகுவது அல்லால், களி யானை மன்னர்க்கோ கைகடத்தல் ஏதம்; துளி உண் பறவைபோல் செவ்வன் ஓர்ப்பாரும், எளியாரை எள்ளாதார் இல். | |
|
உரை
|
|
|
|
|
288. | தம் நடை நோக்கார், தமர் வந்தவாறு அறியார், செந் நடை சேராச் சிறியார்போல் ஆகாது, நின் நடையானே நட-அத்தா!-நின் நடை நின் இன்று அறிகிற்பார் இல். | |
|
உரை
|
|
|
|
|
289. | மல்லல் பெருஞ் செல்வம் மாண்டவர் பெற்றக்கால், செல்வுழியும் ஏமாப்பச் செய்வதாம்;-மெல் இயல், சென்று ஒசிந்து ஒல்கு நுசுப்பினாய்!-பைங் கரும்பு மென்றிருந்து, பாகு செயல். | |
|
உரை
|
|
|
|
|
290. | அல்லவை செய்குப, அல்லாப்பின்; அல்லாக்கால், செல்வது அறிகிலர் ஆகிச் சிதைத்து எழுவர்;- கல்லாக் கயவர் இயற்கை;-நரியிற்கு ஊண் நல் யாண்டும் தீ யாண்டும் இல். | |
|
உரை
|
|
|
|