தொடக்கம் |
|
|
291. | ‘எய்ப்புழி வைப்பாம்’ எனப் போற்றப்பட்டவர் உற்றுழி ஒன்றுக்கு உதவலராய்,-பைத்தொடீஇ!- அச்சு இடையிட்டுத் திரியின், அது அன்றோ, மச்சு ஏற்றி, ஏணி களைவு. | |
|
உரை
|
|
|
|
|
292. | வழங்கார், வலி இலார், வாய்ச் சொல்லும் பொல்லார், உழந்து ஒருவர்க்கு உற்றால் உதவலும் இல்லார், இழந்தது இல் செல்வம் பெறுதல்,-அதுவே பழஞ் செய் போர்பு ஈன்று விடல். | |
|
உரை
|
|
|
|
|
293. | தம்மால் முடிவதனைத் தாம் ஆற்றிச் செய்கலார், ‘பின்னை, ஒருவரால் செய்வித்தும்’ என்று இருத்தல்,- செல் நீர் அருவி மலை நாட!-பாய்பவோ, வெந்நீரும் ஆடாதார் தீ? | |
|
உரை
|
|
|
|
|
294. | ஒருவன் உணராது, உடன்று எழுந்த போருள், இருவரிடை நட்பான் புக்கால், பெரிய வெறுப்பினால் பேர்த்துச் செறுப்பின், தலையுள் குறுக் கண்ணி ஆகிவிடும். | |
|
உரை
|
|
|
|
|
295. | சிறப்புடை மன்னரைச் செவ்வியான் நோக்கி, திறத்தின் உரைப்பார்க்கு ஒன்று ஆகாதது இல்லை; விறற் புகழ் மன்னர்க்கு உயிர் அன்னரேனும், புறத்து அமைச்சின், நன்று, அகத்துக் கூன். | |
|
உரை
|
|
|
|
|
296. | நூக்கி அவர் வெலினும், தாம் வெலினும், வெஞ் சமத்துத் தாக்கி எதிர்ப்படுவர், தக்கவர்; அஃது அன்றி, காப்பின் அகத்து இருந்து காய்வார் மிக உரைத்தல் யாப்பினுள் அட்டிய நீர். | |
|
உரை
|
|
|
|
|
297. | ‘ஒன்றால், சிறிதால், உதவுவது ஒன்று இல்லையால்’ என்று ஆங்கு இருப்பின், இழுக்கம் பெரிது ஆகும்; அன்றைப் பகலேயும் வாழ்கலார்,-நின்றது, சென்றது, பேராதவர். | |
|
உரை
|
|
|
|
|
298. | மானமும் நாணும் அறியார், மதி மயங்கி, ஞானம் அறிவார் இடைப்புக்கு, தாம் இருந்து, ஞானம் வினாஅய் உரைக்கின், நகை ஆகும்- யானைப் பல் காண்பான் புகல். | |
|
உரை
|
|
|
|
|
299. | உளைய உரைத்துவிடினும், உறுதி கிளைகள் வாய்க் கேட்பது நன்றே;-விளை வயலுள் பூ மிதித்துப் புள் கலாம் பொய்கைப் புனல் ஊர!- தாய் மிதித்த ஆகா முடம். | |
|
உரை
|
|
|
|
|
300. | குலத்துச் சிறியார், கலாம் தணிப்பான் புக்கு விலக்குவார் மேலும், எழுதல்-நிலத்து நிலை அழுங்க வேண்டிப் புடைத்தக்கால், வெண் மாத் தலை கீழாக் காதிவிடல். | |
|
உரை
|
|
|
|