301. நோக்கி அறிகல்லாத் தம் உறுப்பு, கண்ணாடி
நோக்கி, அறிப; அதுவேபோல், நோக்கி,
முகன் அறிவார் முன்னம் அறிப; அதுவே,
மகன் அறிவு தந்தை அறிவு.
உரை
   
302. சிறிய பொருள் கொடுத்துச் செய்த வினையால்,
பெரிய பொருள் கருதுவாரே;-விரி பூ
விராஅம் புனல் ஊர!-வேண்டு அயிரை இட்டு,
வராஅஅல் வாங்குபவர்.
உரை
   
303. இன்றி அமையா இரு முது மக்களும்
பொன்றினமை கண்டும், பொருள் பொருளாக் கொள்பவோ?
ஒன்றும் வகையான் அறம் செய்க! ஊர்ந்து உருளின்
குன்று, வழி அடுப்பது இல்.
உரை
   
304. கடம் கொண்ட ஒண் பொருளைக் கைவிட்டு இருப்பார்
இடம் கொண்டு, ‘தம்மினே’ என்றால், தொடங்கிப்
பகை மேற்கொண்டார் போல, கொண்டார் வெகுடல்,
நகை மேலும் கைப்பாய் விடும்.
உரை
   
305. உறாஅ வகையது செய்தாரை, வேந்தன்,
பொறாஅஅன் போல, பொறுத்தால், பொறாஅமை
மேன்மேலும் செய்து விடுதல்,-அது அன்றோ,
கூன்மேல் எழுந்த குரு.
உரை
   
306. ஒன்னார் அட நின்ற போழ்தின், ஒரு மகன்
தன்னை எனைத்தும் வியவற்க! துன்னினார்
நன்மை இலராய்விடினும், நனி பலர் ஆம்
பன்மையின் பாடு உடையது இல்.
உரை
   
307. தமராலும் தம்மாலும் உற்றால், ஒன்று ஆற்றி,
நிகராகச் சென்றாரும் அல்லர்;-இவர் திரை
நீத்த நீர்த் தண் சேர்ப்ப!-செய்தது உவவாதார்க்கு
ஈத்ததை எல்லாம் இழவு.
உரை
   
308. ஆணியாக் கொண்ட கருமம், பதிற்றியாண்டும்
பாணித்தே செய்ப, வியங்கொள்ளின்;-காணி
பயவாமைச் செய்வார் ஆர்? தம் சாகாடேயும்
உயவாமைச் சேறலோ இல்.
உரை
   
309. இடு குடைத் தேர் மன்னர், ‘எமக்கு அமையும்’ என்று,
கடிது அவர் காதலிப்ப தாம் காதல் கொண்டு,
முடிதல் எனைத்தும் உணரா முயறல்,-
கடிய கனைத்துவிடல்.
உரை
   
310. தெரியாதார் சொல்லும் திறன் இன்மை தீதாப்
பரியார், பயன் இன்மை செய்து, பெரியார் சொல்
கொள்ளாது, தாம் தம்மைக் காவாதவர்,-பிறரைக்
கள்ளராச் செய்குறுவார்.
உரை