தொடக்கம் |
|
|
321. | தன்-தூக்கி, தன் துணையும் தூக்கி, பயன் தூக்கி, மற்று அது கொள்வ, மதி வல்லார்; அற்று அன்றி, யாதானும் ஒன்று கொண்டு, யாதானும் செய்தக்கால், யாதானும் ஆகிவிடும். | |
|
உரை
|
|
|
|
|
322. | ‘எம் கண் அனையர்’ எனக் கருதின், ஏதமால்; தங்கண்ணேயானும் தகவு இல கண்டக்கால், வன்கண்ணன் ஆகி ஒறுக்க; ஒறுக்கல்லா மென்கண்ணன் ஆளான், அரசு. | |
|
உரை
|
|
|
|
|
323. | செறிவுடைத் தார் வேந்தன் செவ்வி மாறாமல், அறிவு உடையார் அவ்வியமும் செய்ப;-வறிது உரைத்து, பிள்ளைகளை மருட்டும் தாயர்போல் அம்புலிமேல், ஒள்ளிய காட்டாளர்க்கு அரிது. | |
|
உரை
|
|
|
|
|
324. | கொடையும், ஒழுக்கமும், கோள் உள் உணர்வும், உடையர் எனப்பட்டு ஒழுகி, பகைவர் உடைய, மேற்செல்கிற்கும் ஊற்றம் இலாதார் படையின், படைத் தகைமை நன்று. | |
|
உரை
|
|
|
|
|
325. | முன்னை உடையது காவாது, இகழ்ந்து இருந்து, பின்னை அஃது ஆராய்ந்து கொள்குறுதல்,-இன் இயற்கைப்~ பைத்து அகன்ற அல்குலாய்!-அஃதால், அவ் வெண்ணெய்மேல் வைத்து, மயில் கொள்ளுமாறு. | |
|
உரை
|
|
|
|
|
326. | அல்லவையுள் தோன்றி, அலவலைத்து, வாழ்பவர் நல் அவையுள் புக்கு இருந்து, நா அடங்க, கல்வி அளவு இறந்து மிக்கார் அறிவு எள்ளிக் கூறல்- மிளகு உளு உண்பான் புகல். | |
|
உரை
|
|
|
|
|
327. | உவப்ப உடன்படுத்தற்கு ஏய கருமம் அவற்று அவற்று ஆம் துணைய ஆகி, பயத்தான், வினை முதிரின் செய்தான்மேல் ஏறும்;-பனை முதிரின், தாய் தாள்மேல் வீழ்ந்துவிடும். | |
|
உரை
|
|
|
|
|
328. | நிலத்தின் மிகை ஆம் பெருஞ் செல்வம் வேண்டி, நலத்தகு வேந்தருள் நல்லாரைச் சார்ந்து, நிலத்து நிலைகொள்ளாக் காலரே காணின், உலக்கைமேல் காக்கை என்பார். | |
|
உரை
|
|
|
|
|
329. | அடைய அடைந்தாரை அல்லவை செய்து, கொடை வேந்தன் கோல் கொடியன் ஆகி, குடிகள்மேல் கூட்டு இறப்பக் கொண்டு, தலையளிப்பின், அஃது அன்றோ, சூட்டு அறுத்து வாயில் இடல். | |
|
உரை
|
|
|
|
|
330. | தன்னின் வலியானைத் தான் உடையன் அல்லாக்கால், என்ன குறையன், இளையரால்?-மன்னும் புலியின் பெருந் திறல ஆயினும், பூசை, எலி இல்வழிப் பெறா, பால். | |
|
உரை
|
|
|
|