தொடக்கம் |
|
|
331. | கொடித் திண் தேர் மன்னரால் கூட்டுண்டு வாழ்வார், எடுத்து மேற்கொண்டவர் ஏய வினையை மடித்து ஒழிதல், என் உண்டாம்?-மாணிழாய்!-கள்ளைக் குடித்துக் குழைவாரோ இல். | |
|
உரை
|
|
|
|
|
332. | சொல்தொறும் சோர்வு படுதலால், சோர்வு இன்றிக் கற்றொறும், ‘கல்லாதேன்’ என்று, வழி இரங்கி, உற்று ஒன்று சிந்தித்து, உழந்து ஒன்று அறியுமேல், கற்றொறும் தான் கல்லாதவாறு. | |
|
உரை
|
|
|
|
|
333. | பாற்பட்டு வாழ்வர் எனினும், குடிகள்மேல் மேற்பட்ட கூட்டு மிகை நிற்றல் வேண்டாவே; கோல் தலையே ஆயினும் கொண்டீக! காணுங்கால், பால் தலைப் பால் ஊறல் இல். | |
|
உரை
|
|
|
|
|
334. | விளக்கு விலை கொடுத்துக் கோடல், விளக்குத் துளக்கம் இன்று என்று அனைத்தும் தூக்கி; விளக்கு மருள் படுவது ஆயின்,-மலை நாட!-என்னை? பொருள் கொடுத்துக் கொள்ளார், இருள். | |
|
உரை
|
|
|
|
|
335. | பூ உட்கும் கண்ணாய்!-'பொறுப்பர்’ எனக் கருதி, யாவர்க்கே ஆயினும் இன்னா செயல் வேண்டா;- தேவர்க்கும் கைகூடாத் திண் அன்பினார்க்கேயும், நோவச் செயின், நோன்மை இல். | |
|
உரை
|
|
|
|
|
336. | அமையா இடத்து ஓர் அரும் பொருள் வைத்தால், இமையாது காப்பினும் ஆகா; இமையாரும் அக் காலத்து ஓம்பி, அமிழ்து கோட்பட்டமையின், நல் காப்பின் தீச் சிறையே நன்று. | |
|
உரை
|
|
|
|
|
337. | நல்லார் நலத்தை உணரின், அவரினும் நல்லார் உணர்ப; பிறர் உணரார்;-நல்ல மயில் ஆடும் மா மலை வெற்ப!-மற்று என்றும், அயிலாலே போழ்ப, அயில். | |
|
உரை
|
|
|
|
|
338. | இரு கயல் உண் கண் இளையவளை, வேந்தன், ‘தருக!’ என்றால் தன்னையரும் நேரார்; செரு அறைந்து, பாழித் தோள் வட்டித்தார்; காண்பாம்; இனிது அல்லால், வாழைக்காய் உப்பு உறைத்தல் இல். | |
|
உரை
|
|
|
|
|
339. | விழுத் தொடையர் ஆகி விளங்கி, தொல் வந்தார் ஒழுக்கு உடையர் ஆகி ஒழுகல்,-பழத் தெங்கு செய்த்தலை வீழும் புனல் ஊர!-அஃதே, நன் நெய்த்தலைப் பால் உக்குவிடல். | |
|
உரை
|
|
|
|
|
340. | ஓரும் ஒருவர் ஒருவர்தம் உள்ளத்தைத் தேரும் திறம் அரிதால்;-தேமொழீஇ!-ஆரும் குலக் குல வண்ணத்தர் ஆகுப; ஆங்கே, புலப் புல வண்ணத்த, புள். | |
|
உரை
|
|
|
|