தொடக்கம் |
|
|
341. | தாமேயும் தம்மைப் புறந்தர ஆற்றாதார், வாமான் தேர் மன்னரைக் காய்வது எவன்கொலோ?- ஆமா உகளும் அணி வரை வெற்ப!- கேள்; ஏமாரார் கோங்கு ஏறினார். | |
|
உரை
|
|
|
|
|
342. | சிறந்த தம் சுற்றமும் செய் பொருளும் நீக்கி, துறந்தார் தொடர்ப்பாடு கோடல்,-கறங்கு அருவி ஏனல்வாய் வீழும் மலை நாட!-அஃது அன்றோ, யானை போய், வால் போகாவாறு. | |
|
உரை
|
|
|
|
|
343. | முழவு ஒலி முந்நீர் முழுதுடன் ஆண்டோர் விழவு ஊரில் கூத்தேபோல் வீழ்ந்து அவிதல் கண்டும், ‘இழவு’ என்று ஒரு பொருள் ஈயாதான் செல்வம், அழகொடு கண்ணின் இழவு. | |
|
உரை
|
|
|
|
|
344. | ‘இரப்பவர்க்கு ஈயக் குறைபடும்’ என்று எண்ணி, கரப்பவர் கண்டறியார்கொல்லோ?-பரப்பில் துறைத் தோணி நின்று உலாம் தூங்கு நீர்ச் சேர்ப்ப!- இறைத்தோறும் ஊறும் கிணறு. | |
|
உரை
|
|
|
|
|
345. | பல்லார் அவை நடுவண் பாற்பட்ட சான்றவர் சொல்லார் ஒருவரையும், உள் ஊன்ற;-பல் ஆ நிரைப் புறம் காத்த நெடியோனே ஆயினும், உரைத்தால், உரை பெறுதல் உண்டு. | |
|
உரை
|
|
|
|
|
346. | இம்மைத் தவமும், அறமும், என இரண்டும், தம்மை உடையார் அவற்றைச் சலம் ஒழுகல், இம்மைப் பழி ஏயும்; அன்றி, மறுமையும், தம்மைத் தாம் ஆர்க்கும் கயிறு. | |
|
உரை
|
|
|
|
|
347. | துன்னி இருவர் தொடங்கிய மாற்றத்தில் பின்னை உரைக்கப்படற்பாலான், முன்னி மொழிந்தால் மொழி அறியான் கூறல்,-முழந்தாள் கிழிந்தானை மூக்குப் பொதிவு. | |
|
உரை
|
|
|
|
|
348. | பேர் உலையுள் பெய்த அரிசியை வெந்தமை ஓர் அவிழினாலே உணர்ந்தாங்கு, யார்கண்ணும் கண்டதனால் காண்டலே வேண்டுமாம்; யாதற்கும் கண்டது காரணம் ஆமாறு. | |
|
உரை
|
|
|
|
|
349. | தலைமை கருதும் தகையாரை வேந்தன் நிலைமையான் நேர் செய்திருத்தல்,-மலைமிசைக் காம்பு அனுக்கும் மென் தோளாய்!-அஃதுஅன்றோ, ஓர் அறையுள் பாம்பொடு உடன் உறையுமாறு. | |
|
உரை
|
|
|
|
|
350. | கல்லாதும், கேளாதும், கற்றார் அவை நடுவண் சொல்லாடுவாரையும் அஞ்சற்பாற்று-எல் அருவி பாய் வரை நாட!-பரிசு அழிந்தாரொடு தேவரும் மாற்றல் இலர். | |
|
உரை
|
|
|
|