351. கூர் அறிவினார் வாய்க் குணமுடைச் சொல் கொள்ளாது,
கார் அறிவு கந்தா, கடியன செய்வாரைப்
பேர் அறியார் ஆயின பேதைகள் யார் உளரோ?-
ஊர் அறியா மூரியோ இல்.
உரை
   
352. ஒருவர் உரைப்ப உரைத்தால், அது கொண்டு
இருவர் ஆவாரும் எதிர் மொழியற் பாலா;-
பெரு வரை நாட!-சிறிதேனும் இன்னாது,
இருவர் உடன் ஆடல் நாய்.
உரை
   
353. துயிலும் பொழுதே தொடு ஊண் மேற்கொண்டு,
வெயில் விரி போழ்தின் வெளிப்பட்டார் ஆகி,-
அயில் போலும் கண்ணாய்!-அடைந்தார்போல் காட்டி,
மயில் போலும் கள்வர் உடைத்து.
உரை
   
354. நலிந்து ஒருவன் நாளும் அடுபாக்குப் புக்கால்,
மெலிந்து அவன் வீழாமை கண்டு, மலிந்து அடைதல்,-
பூப் பிழைத்து வண்டு புடை ஆடும் கண்ணினாய்!-
ஏப் பிழைத்துக் காக் கொள்ளுமாறு.
உரை
   
355. பொருந்தாப் பழி என்னும் பொல்லாப் பிணிக்கு
மருந்து ஆகி நிற்பதாம் மாட்சி; மருந்தின்
தணியாது விட்டக்கால்,-தண் கடல் சேர்ப்ப!-
பிணி ஈடு அழித்துவிடும்.
உரை
   
356. பெரிய குடிப் பிறந்தாரும் தமக்குச்
சிறியார் இனமா ஒழுகல்-வெறி இலை
வேலொடு நேர் ஒக்கும் கண்ணாய்!-அஃது அன்றோ,
பூவொடு நார் இயைக்குமாறு.
உரை
   
357. செயல் வேண்டா நல்லவை செய்விக்கும்; தீய
செயல் வேண்டி நிற்பின், விலக்கும்; இகல் வேந்தன்-
தன்னை நலிந்து தனக்கு உறுதி கூறலால்,-
முன் இன்னா, மூத்தார் வாய்ச் சொல்.
உரை
   
358. தன்னை மதித்து, தமர் என்று கொண்டக்கால்,
என்ன படினும், அவர் செய்வ செய்வதே;-
இன் ஒலி வெற்ப!-இடர் என்னை? துன்னூசி
போம் வழிப் போகும், இழை.
உரை
   
359. மனத்தினும், வாயினும், மெய்யினும், செய்கை
அனைத்தினும், ஆன்று அவிந்தார் ஆகி, நினைத்திருந்து,
ஒன்றும் பரியலராய், ஓம்புவார் இல் எனின்,
சென்று படுமாம், உயிர்.
உரை
   
360. பேதுறவு தீரப் பெருக்கத் தலையளித்து,
ஆசு அறுவ செய்யாராய், ஆற்றப் பெருகினும்,
மாசு அற மாண்ட மனம் உடையர் ஆகாத
கூதறைகள் ஆகார், குடி.
உரை