361. முல்லைக்குத் தேரும், மயிலுக்குப் போர்வையும்,
தொல்லை, அளித்தாரைக் கேட்டு அறிதும்;-சொல்லின்,
நெறி மடல் பூந் தாழை நீடு நீர்ச் சேர்ப்ப!-
அறி மடமும் சான்றோர்க்கு அணி.
உரை
   
362. எனைப் பல் பிறப்பினும் ஈண்டி, தாம் கொண்ட
வினைப் பயன் மெய் உறுதல் அஞ்சி, எனைத்தும்,
கழிப்புழி ஆற்றாமை காண்டும்; அதுவே,
குழிப் புழி ஆற்றா குழிக்கு.
உரை
   
363. கொண்டு ஒழுகு மூன்றற்கு உதவாப் பசித் தோற்றம்
பண்டு ஒழுகி வந்த வளமைத்து அங்கு உண்டு, அது
கும்பியில் உந்திச் சென்று எறிதலால்,-தன் ஆசை
அம்பாய் உள் புக்குவிடும்.
உரை
   
364. வழிப்பட்டவரை வலியராச் செய்தார்
அழிப்பினும் ஆக்கினும் ஆகும்;-விழுத்தக்க
பை அரவு அல்குல் பணைத் தோளாய்!-பாத்து அறிவு என்,
மெல்ல? கவுள் கொண்ட நீர்.
உரை
   
365. பல் நாள் தொழில் செய்து, உடைய கவர்ந்து உண்டார்,
இன்னாத செய்யாமை வேண்டி, இறைவர்க்குப்
பொன் யாத்துக் கொண்டு புகுதல்,-குவளையைத்
தன் நாரால் யாத்துவிடல்.
உரை
   
366. பல் கிளையுள் பாத்துறான் ஆகி, ஒருவனை
நல்குரவால், வேறாக நன்கு உணரான் சொல்லின்,
உரையுள் வளவிய சொல் சொல்லாததுபோல்,
நிரையுள்ளே இன்னா, வரைவு.
உரை
   
367. கல்லாதான் கண்ட கழி நுட்பம் காட்டு அரிதால்;
‘நல்லேம் யாம்’ என்று ஒருவன் நன்கு மதித்தல் என்?
சொல்லால் வணக்கி, வெகுண்டு, அடுகிற்பார்க்கும்,-
சொல்லாக்கால் சொல்லுவது இல்.
உரை
   
368. தமக்கு உற்றதே ஆகத் தம் அடைந்தார்க்கு உற்றது
எமக்கு உற்றது என்று உணரா விட்டக்கால், என் ஆம்?-
இமைத்து அருவி பொன் வரன்றும் ஈர்ங் குன்ற நாட!-
உமிக் குற்றுக் கை வருந்துமாறு.
உரை
   
369. மாற்றத்தை மாற்றம் உடைத்தலான், மாற்றவர்க்கு
ஆற்றும் வகையான் அவர்க் களைய வேண்டுமே,
வேற்றுமை யார்க்கும் உண்டுஆதலான்;-ஆற்றுவான்
நூற்றுவரைக் கொண்டுவிடும்.
உரை
   
370. இறப்பச் சிறியவர் இன்னா செயினும்,
பிறப்பினால் மாண்டார் வெகுளார்;-திறத்து உள்ளி
நல்ல விறகின் அடினும், நனி வெந்நீர்
இல்லம் சுடுகலாவாறு.
உரை