371. ஊழாயினாரைக் களைந்திட்டு, உதவாத
கீழாயினாரைப் பெருக்குதல்,-யாழ் போலும்
தீம் சொல் மழலையாய்!-தேன் ஆர் பலாக் குறைத்து,
காஞ்சிரை நட்டுவிடல்.
உரை
   
372. மடங்கப் பசிப்பினும், மாண்புடையாளர்,
தொடங்கிப் பிறர் உடைமை மேவார்;-குடம்பை
மடலொடு புள் கலாம் மால் கடல் சேர்ப்ப!-
கடலொடு காட்டு ஒட்டல் இல்.
உரை
   
373. தெற்ற அறிவுடையார்க்கு அல்லால், திறன் இல்லா
முற்றலை நாடிக் கருமம் செய வையார்;
கற்று ஒன்று அறிந்து, கசடு அற்ற காலையும்,
அற்றதன்பால் தேம்பல் நன்று.
உரை
   
374. வல் நெஞ்சினார் பின் வழி நினைந்து செல்குவையால்;
என் நெஞ்சே! இன்று அழிவாய் ஆயினாய்; செல், நெஞ்சே!
இல் சுட்டி நீயும் இனிது உரைத்துச் சாவாதே;
பல் கட்டு, அப் பெண்டிர், மகார்.
உரை
   
375. நீர்த் தகவு இல்லார் நிரம்பாமைத் தம் நலியின்,
கூர்த்து அவரைத் தாம் நலிதல் கோள் அன்றால், சான்றவர்க்கு;-
பார்த்து ஓடிச் சென்று, கதம் பட்டு நாய் கவ்வின்,
பேர்த்து நாய் கவ்வினார் இல்.
உரை
   
376. எல்லாத் திறத்தும், இறப்பப் பெரியாரை,
கல்லாத் துணையார் கயப்பித்தல் சொல்லின்,-
நிறைந்து ஆர் வளையினாய்!-அஃதால், எருக்கு
மறைந்து, யானை பாய்ச்சிவிடல்.
உரை
   
377. தலைக்கொண்ட தம் கருமம் தாம் மடிக் கொண்டு,
கடைப்பிடி இல்லார்பால் வைத்து, கடைப்பிடி
மிக்கு ஓடி விட்டுத் திரியின், அது பெரிது
உக்கு ஓடிக் காட்டிவிடும்.
உரை
   
378. உருத்து எழு ஞாட்பினுள், ஒன்னார் தொலைய,
செருக்கினால் செய்கலார் செய்வாரே போல,
தருக்கினால் தம் இறைவன் கூழ் உண்பவரே-
கருத்தினால் கூறை கொள்வார்.
உரை
   
379. படரும் பிறப்பிற்கு ஒன்று ஈயார், பொருளைத்
தொடரும் தம் பற்றினால் வைத்து, இறப்பாரே,-
அடரும் பொழுதின்கண், இட்டு, குடர் ஒழிய,
மீ வேலி போக்குபவர்.
உரை
   
380. பல் ஆண்டும் ஈண்டிப் பழுதாய்க் கிடந்தது
வல்லான் தெரிந்து வழங்குங்கால், வல்லே
வளம் நெடிது கொண்டது அறாஅது;-அறுமோ,
குளம் நெடிது கொண்டது நீர்?
உரை