தொடக்கம் |
|
|
381. | ‘இரவலர் தம் வரிசை’ என்பார், மடவார்; கரவலராய்க் கை வண்மை பூண்ட புரவலர் சீர் வரைய ஆகுமாம், செய்கை சிறந்து அனைத்தும்;- நீர் வரையவாம் நீர் மலர். | |
|
உரை
|
|
|
|
|
382. | அமர் நின்ற போழ்தின்கண் ஆற்றுவரேனும், நிகர் ஒன்றின்மேல் விடுதல் ஏதம்;-நிகர் இன்றி வில்லொடு நேர் ஒத்த புருவத்தாய்!-அஃது அன்றோ, கல்லொடு கை எறியுமாறு. | |
|
உரை
|
|
|
|
|
383. | சீர்த் தகு மன்னர் சிறந்த அனைத்தும் கெட்டாலும், நேர்த்து உரைத்து எள்ளார், நிலை நோக்கி;-சீர்த்த கிளை இன்றிப் போஒய்த் தனித்து ஆயக்கண்ணும், இளைது என்று பாம்பு இகழ்வார் இல். | |
|
உரை
|
|
|
|
|
384. | இகலின் வலியாரை எள்ளி, எளியார், இகலின் எதிர் நிற்றல் ஏதம்;-அகலப் போய், என் செய்தே ஆயினும் உய்ந்தீக!-சாவாதான் முன்கை வளையும் தொடும். | |
|
உரை
|
|
|
|
|
385. | ‘ஆறாச் சினத்தன் அறிவு இலன்; மற்று அவனை மாறி ஒழுகல் தலை’ என்ப;-ஏறி வளியால் திரை உலாம் வாங்கு நீர்ச் சேர்ப்ப!- தெளியானைத் தேறல் அரிது. | |
|
உரை
|
|
|
|
|
386. | ‘தீர்ந்தேம்’ எனக் கருதி, தேற்றாது ஒழுகி, தாம் ஊர்ந்த பரிவும் இலர் ஆகி, சேர்ந்தார் பழமை கந்து ஆக, பரியார், புதுமை;- முழ நட்பின், சாண் உட்கு நன்று. | |
|
உரை
|
|
|
|
|
387. | மறையாது இனிது உரைத்தல், மாண் பொருள் ஈதல், அறையான் அகப்படுத்துக் கோடல், முறையால் நடுவணாச் சென்று அவரை நன்கு எறிதல், அல்லால், ஒடி எறியத் தீரா, பகை. | |
|
உரை
|
|
|
|
|
388. | செய்த கொடுமை உடையான், அதன் பயம் எய்த உரையான், இடரினால்;-எய்தி மரிசாதியாய் இருந்த மன்று அஞ்சுவாற்குப் பரிகாரம் யாதொன்றும் இல். | |
|
உரை
|
|
|
|
|
389. | மடியை வியங்கொள்ளின், மற்றைக் கருமம் முடியாதவாறே முயலும்;-கொடி அன்னாய்!- பாரித்தவனை நலிந்து தொழில் கோடல், மூரி எருத்தான் உழவு. | |
|
உரை
|
|
|
|
|
390. | எதிர்த்த பகையை இளைது ஆய போழ்தே கதித்துக் களையின் முதிராது எதிர்த்து, நனி நிற்பச் செய்தவர் நண்பு எலாம் தீர்க்க;- தனி மரம் காடு ஆவது இல். | |
|
உரை
|
|
|
|