தொடக்கம் |
|
|
391. | வெண்குடைக்கீழ் வாழும் குடிகட்கு வேந்தனும் செங்கோலன் அல்லனேல், செய்வது என்?-பொங்கு படு திரைச் சேர்ப்ப!-மற்று இல்லையே, யானை தொடு உண்ணின், மூடும் கலம். | |
|
உரை
|
|
|
|
|
392. | செல்லற்க, சேர்ந்தார் புலம்புற! செல்லாது நில்லற்க, நீத்தார் நெறி ஒரீஇ! பல் காலும் நாடுக, தான் செய்த நுட்பத்தை!-கேளாதே ஓடுக, ஊர் ஓடுமாறு! | |
|
உரை
|
|
|
|
|
393. | ஓத நீர் வேலி உலகத்தார், ‘இந் நெறி காதலர்’ என்பது அறிந்து அல்லால், யாது ஒன்றும்- கானக நாட!-பயிலார்; பயின்றதூஉம் வானகம் ஆகிவிடும். | |
|
உரை
|
|
|
|
|
394. | கெடுவல் எனப்பட்டக்கண்ணும், தனக்கு ஓர் வடு அல்ல செய்தலே வேண்டும்;-நெடு வரை முற்று நீர் ஆழி வரையகத்து ஈண்டிய கல் தேயும்; தேயாது, சொல். | |
|
உரை
|
|
|
|
|
395. | மெய்ந் நீரர் ஆகி விரியப் புகுவார்க்கும், பொய்ந் நீரர் ஆகிப் பொருளை முடிப்பார்க்கும், எந் நீரர் ஆயினும் ஆக!-அவரவர் தம் நீரர் ஆதல் தலை. | |
|
உரை
|
|
|
|
|
396. | தொடி முன்கை நல்லாய்!-அத் தொக்க பொருளைக் குடிமகன் அல்லான் கை வைத்தல்,-கடி நெய்தல் வேரி கமழும் விரி திரைத் தண் சேர்ப்ப!- மூரியைத் தீற்றிய புல். | |
|
உரை
|
|
|
|
|
397. | வேந்தன் மதித்து உணரப்பட்டாரைக் கொண்டு, ஏனை மாந்தரும் ஆங்கே மதித்து உணர்ப;-ஆய்ந்த நல மென் கதுப்பினாய்!-நாடின் நெய் பெய்த கலமே நெய் பெய்துவிடும். | |
|
உரை
|
|
|
|
|
398. | நட்டாரை ஆக்கி, பகை தணித்து, வை எயிற்றுப் பட்டு ஆர் அகல் அல்குலார்ப் படர்ந்து, ஒட்டித் தொடங்கினார் இல்லத்து, அதன்பின் துறவா உடம்பினால் என்ன பயன்? | |
|
உரை
|
|
|
|
|
399. | பூத்தாலும் காயா மரம் உள; மூத்தாலும் நன்கு அறியார் தாமும் நனி உளர்; பாத்தி விதைத்தாலும் நாறாத வித்து உள; பேதைக்கு உரைத்தாலும் தோன்றாது உணர்வு. | |
|
உரை
|
|
|
|
|
400. | நாண் இன்றி ஆகாது, பெண்மை; நயவிய ஊண் இன்றி ஆகாது, உயிர் வாழ்க்கை; பேணுங்கால், கைத்து இன்றி ஆகா, கருமங்கள்;-காரிகையாய்!- வித்து இன்றிச் சம்பிரதம் இல். | |
|
உரை
|
|
|
|