தொடக்கம் |
|
|
1. | ஒத்த ஒழுக்கம், கொலை, பொய், புலால், களவோடு, ஒத்த இவை அல் ஒரு நால் இட்டு, ஒத்த உறு பஞ்ச மூலம் தீர் மாரிபோல் கூறீர்- சிறுபஞ்சமூலம் சிறந்து! | |
|
உரை
|
|
|
|
|
2. | பொருள் உடையான் கண்ணதே, போகம்; அறனும், அருள் உடையான் கண்ணதே ஆகும்; அருள் உடையான் செய்யான் பழி; பாவம் சேரான்; புறமொழியும் உய்யான், பிறன் செவிக்கு உய்த்து. | |
|
உரை
|
|
|
|
|
3. | கற்புடைய பெண் அமிர்து; கற்று அடங்கினான் அமிர்து; நற்பு உடைய நாடு அமிர்து; நாட்டுக்கு நற்பு உடைய மேகமே சேர் கொடி வேந்து அமிர்து; சேவகனும் ஆகவே செய்யின், அமிர்து. | |
|
உரை
|
|
|
|
|
4. | கல்லாதான் தான் காணும் நுட்பமும், காது இரண்டும் இல்லாதாள் ஏக்கழுத்தம் செய்தலும், இல்லாதான் ஒல்லாப் பொருள் இலார்க்கு ஈத்து அறியான் என்றலும், நல்லார்கள் கேட்பின் நகை. | |
|
உரை
|
|
|
|
|
5. | உடம்பு ஒழிய வேண்டின், உயர் தவம்; மற்று ஈண்டு இடம் பொழிய வேண்டுமேல், ஈகை; மடம் பொழிய வேண்டின், அறிமடம்; வேண்டேல், பிறர் மனை; ஈண்டின், இயையும் திரு. | |
|
உரை
|
|
|
|
|
6. | படைதனக்கு யானை வனப்பு ஆகும்; பெண்ணின் இடை தனக்கு நுண்மை வனப்பு ஆம்; நடைதனக்குக் கோடா மொழி வனப்பு; கோற்கு அதுவே; சேவகற்கு வாடாத வன்கண் வனப்பு. | |
|
உரை
|
|
|
|
|
7. | பற்றினான், பற்று அற்றான் நூல், தவசி; எப் பொருளும் முற்றினான் ஆகும், முதல்வன்; நூல் பற்றினால் பாத்து உண்பான் பார்ப்பான்; பழி உணர்வான் சான்றவன்; காத்து உண்பான் காணான், பிணி. | |
|
உரை
|
|
|
|
|
8. | கண் வனப்புக் கண்ணோட்டம்; கால் வனப்புச் செல்லாமை; எண் வனப்பு, ‘இத் துணை ஆம்’ என்று உரைத்தல்; பண் வனப்புக் கேட்டார், நன்று என்றல்; கிளர் வேந்தன் தன் நாடு வாட்டான், நன்று என்றல் வனப்பு. | |
|
உரை
|
|
|
|
|
9. | கொன்று உண்பான் நாச் சாம்; கொடுங் கரி போவான் நாச் சாம்; நன்று உணர்வார் முன் கல்லான் நாவும் சாம்; ஒன்றானைக் கண்டுழி, நாச் சாம்; கடவான் குடிப் பிறந்தான் உண்டுழி, நாச் சாம், உணர்ந்து. | |
|
உரை
|
|
|
|
|
10. | சிலம்பிக்குத் தன் சினை கூற்றம்; நீள் கோடு விலங்கிற்குக் கூற்றம்; மயிர்தான் வலம் படா மாவிற்குக் கூற்றம் ஆம்; ஞெண்டிற்குத் தன் பார்ப்பு; நாவிற்கு நன்று அல் வசை. | |
|
உரை
|
|
|
|