தொடக்கம் |
|
|
51. | உண்ணாமை நன்று, அவா நீக்கி; விருந்து கண்மாறு எண்ணாமை நன்று; இகழின், தீது, எளியார்; எண்ணின், அரியர் ஆவார் பிறர் இல் செல்லாரே; உண்ணார், பெரியர் ஆவார், பிறர் கைத்து. | |
|
உரை
|
|
|
|
|
52. | மக்கள் பெறுதல், மடன் உடைமை, மாது உடைமை, ஒக்க உடன் உறைதல், ஊண் அமைவு-தொக்க அலவலை அல்லாமை பெண் மகளிர்க்கு-ஐந்தும் தலைமகனைத் தாழ்க்கும் மருந்து. | |
|
உரை
|
|
|
|
|
53. | கொண்டான் கொழுநன், உடன்பிறந்தான், தன் மாமன், வண்டு ஆர் பூந் தொங்கல் மகன், தந்தை,-வண் தாராய்!- யாப்பு ஆர் பூங் கோதை அணி இழையை, நற்கு இயையக் காப்பார், கருதும் இடத்து. | |
|
உரை
|
|
|
|
|
54. | ஆம்-பல், வாய், கண், மனம், வார் புருவம், என்று ஐந்தும், தாம் பல் வாய் ஓடி, நிறை காத்தல் ஓம்பார், நெடுங் கழை நீள் மூங்கில் என இகழ்ந்தார், ஆட்டும் கொடுங் குழை போல, கொளின். | |
|
உரை
|
|
|
|
|
55. | பொன் பெறும், கற்றான் பொருள் பெறும், நற் கவி; என் பெறும் வாதி, இசை பெறும்; முன் பெறக் கல்லார், கற்றார் இனத்தர் அல்லார், பெறுபவே, நல்லார் இனத்து நகை. | |
|
உரை
|
|
|
|
|
56. | நல்ல வெளிப்படுத்து, தீய மறந்து ஒழிந்து, ஒல்லை உயிர்க்கு ஊற்றங்கோல் ஆகி, ஒல்லுமேல், மாயம் பிறர் பொருட்கண் மாற்றி, மா மானத்தான் ஆயின், அழிதல் அறிவு. | |
|
உரை
|
|
|
|
|
57. | தன் நிலையும், தாழாத் தொழில் நிலையும், துப்பு எதிர்ந்தார் இன் நிலையும், ஈடு இல் இயல் நிலையும், துன்னி, அளந்து அறிந்து செய்வான் அரைசு; அமைச்சன் யாதும் பிளந்து அறியும் பேர் ஆற்றலான். | |
|
உரை
|
|
|
|
|
58. | பொருள், போகம், அஞ்சாமை, பொன்றுங்கால் போர்த்த அருள், போகா ஆர் அறம், என்று ஐந்தும் இருள் தீரக் கூறப்படும் குணத்தான், கூர் வேல் வல் வேந்தனால் தேறப்படும் குணத்தினான். | |
|
உரை
|
|
|
|
|
59. | நன் புலத்து வை அடக்கி, நாளும் நாள் ஏர் போற்றி, புன் புலத்தைச் செய்து, எருப் போற்றிய பின், நன் புலக்கண் பண் கலப்பை பாற்படுப்பான் உழவன் என்பவே நுண் கலப்பை நூல் ஓதுவார். | |
|
உரை
|
|
|
|
|
60. | ஏலாமை நன்று; ஈதல் தீது, பண்பு இல்லார்க்கு; சாலாமை நன்று, நூல்; சாயினும், ‘சாலாமை நன்று; தவம் நனி செய்தல் தீது’ என்பாரை இன்றுகாறு யாம் கண்டிலம். | |
|
உரை
|
|
|
|