தொடக்கம் |
|
|
81. | கழிந்தவை தான் இரங்கான், கைவாரா நச்சான், இகழ்ந்தவை இன்புறான், இல்லார் மொழிந்தவை மென் மொழியால், உள் நெகிழ்ந்து, ஈவானேல்,-விண்ணோரால் இன் மொழியால் ஏத்தப்படும். | |
|
உரை
|
|
|
|
|
82. | காடுபோல் கட்கு இனிய இல்லம், பிறர் பொருள் ஓடுபோல், தாரம் பிறந்த தாய், ஊடு போய்க் கோத்து இன்னா சொல்லானாய், கொல்லானேல்.-பல்லவர் ஓத்தினால் என்ன குறை? | |
|
உரை
|
|
|
|
|
83. | தோற் கன்று காட்டிக் கறவார்; கறந்த பால் பாற்பட்டார் உண்ணார்; பழி, பாவம், பாற்பட்டார், ஏற்று அயரா, இன்புற்று வாழ்வன, ஈடு அழியக் கூற்று அயரச் செய்யார், கொணர்ந்து. | |
|
உரை
|
|
|
|
|
84. | நகையொடு, மந்திரம், நட்டார்க்கு வாரம், பகையொடு, பாட்டு உரை, என்று ஐந்தும் தொகையொடு மூத்தார் இருந்துழி வேண்டார், முது நூலுள் யாத்தார், அறிவினர் ஆய்ந்து. | |
|
உரை
|
|
|
|
|
85. | சத்தம், மெய்ஞ் ஞானம், தருக்கம், சமையமே, வித்தகர் கண்ட வீடு உள்ளிட்டு, ஆங்கு அத் தகத் தந்த இவ் ஐந்தும் அறிவான், தலையாய, சிந்திப்பின் சிட்டன் சிறந்து. | |
|
உரை
|
|
|
|
|
86. | கண்ணுங்கால் கண்ணும் கணிதமே, யாழினோடு, எண்ணுங்கால் சாந்தே, எழுதல், இலை நறுக்கு, இட்ட இவ் ஐந்தும் அறிவான்-இடையாய சிட்டன் என்று எண்ணப்படும். | |
|
உரை
|
|
|
|
|
87. | நாண் இலன் நாய்; நன்கு நள்ளாதான் நாய்; பெரியார்ப் பேண் இலன் நாய்; பிறர் சேவகன் நாய்; ஏண் இல் பொருத்திய பூண் முலையார் சேரி, கைத்து இல்லான், பருத்தி பகர்வுழி நாய். | |
|
உரை
|
|
|
|
|
88. | நாண் எளிது, பெண்ணேல்; நகை எளிது, நட்டானேல்; ஏண் எளிது, சேவகனேல்; பெரியார்ப் பேண் எளிது;- கொம்பு மறைக்கும் இடாஅய்!-அவிழின்மீது அம்பு பறத்தல் அரிது. | |
|
உரை
|
|
|
|
|
89. | இன் சொல்லான் ஆகும், கிளைமை; இயல்பு இல்லா வன் சொல்லான் ஆகும், பகைமை மன்; மென் சொல்லான் ஆய்வு இல்லா ஆர் அருளாம்; அவ் அருள் நல் மனத்தான்; வீவு இல்லா வீடு ஆய் விடும். | |
|
உரை
|
|
|
|
|
90. | தக்கது, இளையான் தவம்; செல்வன் ஊண் மறுத்தல் தக்கது; கற்புடையாள் வனப்புத் தக்கது; அழல், தண்ணென் தோளாள் அறிவு இலள் ஆயின், நிழற்கண் முயிறு, ஆய்விடும். | |
|
உரை
|
|
|
|