91. ‘பொய்யான் சுவர்க்கம்; வாயான் நிரையம்; பொருள்தான்,
மை ஆர் மடந்தையர் இல் வாழ்வு இனிது’-மெய் அன்றால்;-
மைத் தக நீண்ட மலர்க் கண்ணாய்!-தீது அன்றே
எத் தவமானும் படல்.
உரை
   
92. புல் அறத்தின் நன்று, மனை வாழ்க்கை; போற்று உடைத்தேல்,
நல்லறத்தாரோடும் நட்கலாம்; நல்லறத்தார்க்கு
அட்டு, இட்டு, உண்டு, ஆற்ற வாழ்ந்தார்களே, இம்மையில்
அட்டு, இட்டு, உண்டு, ஆற்ற வாழ்வார்.
உரை
   
93. ஈவது நன்று; தீது, ஈயாமை; நல்லவர்
மேவது நன்று, மேவாதாரோடு; ஓவாது,
கேட்டுத் தலைநிற்க; கேடு இல் உயர் கதிக்கே
ஓட்டுத்தலை நிற்கும் ஊர்ந்து.
உரை
   
94. உண் இடத்தும், ஒன்னார் மெலிவு இடத்தும், மந்திரம் கொண்டு
எண் இடத்தும், செல்லாமைதான் தலையே; எண்ணி,
உரைப் பூசல் போற்றல், உறு தவமேல் கங்கைக்
கரைப் பூசை போறல், கடை.
உரை
   
95. பத்தினி, சேவகன், பாத்து இல் கடுந் தவசி,
பொத்து இல் பொருள்-திறத்துச் செவ்வியான், பொத்து இன்றி
வைத்தால் வழக்கு உரைக்கும் சான்றான்,-இவர் செம்மை
செத்தால் அறிக, சிறந்து!
உரை
   
96. வழிப் படர், வாய்ப்ப வருந்தாமை, வாய் அல்
குழிப் படல், தீச் சொற்கேளாடு, மொழிப்பட்ட
காய்ந்து விடுதல்,-களைந்து, உய்யக் கற்றவர்,
ஆய்ந்து விடுதல் அறம்.
உரை