| தொடக்கம் | 
		
		
				|  | 
					
			
			|  | | ஐந்திணை ஐம்பது (மாறன் பொறையனார்)
 1. முல்லை
 தலைமகளைத் தோழி பருவம் காட்டி வற்புறுத்தியது
 |  |
 | 1. | மல்லர்க் கடந்தான் நிறம் போன்று இருண்டு எழுந்து, செல்வக் கடம்பு அமர்ந்தான் வேல் மின்னி,-நல்லாய்!-
 இயங்கு எயில் எய்தவன் தார் பூப்ப, ஈதோ
 மயங்கி வலன் ஏரும், கார்!
 |  |
 | உரை | 
		
			|  |  |  | 
					
			
			|  | | பருவம் கண்டு அழிந்த தலைமகள் தோழிக்குச் சொல்லியது |  |
 | 2. | அணி நிற மஞ்ஞை அகவ, இரங்கி, மணி நிற மா மலைமேல் தாழ்ந்து,-பணிமொழி!-
 கார் நீர்மை கொண்ட கலி வானம் காண்தொறும்,
 பீர் நீர்மை கொண்டன, தோள்.
 |  |
 | உரை | 
		
			|  |  |  | 
					
			
			|  | | பருவம் கண்டு அழிந்த கிழத்திக்குத் தோழி சொல்லியது |  |
 | 3. | மின்னும், முழக்கும், இடியும் மற்று இன்ன கொலைப் படை சாலப் பரப்பிய,-முல்லை
 முகை வென்ற பல்லினாய்!-இல்லையோ, மற்று
 நமர் சென்ற நாட்டுள் இக் கார்?
 |  |
 | உரை | 
		
			|  |  |  | 
					
			
			|  | | 4. | உள்ளார்கொல் காதலர்-ஒண்தொடி!-நம் திறம்? வள் வார் முரசின் குரல்போல் இடித்து உரறி,
 நல்லார் மனம் கவரத் தோன்றி, பணிமொழியைக்
 கொல்வாங்குக் கூர்ந்தது, இக் கார்.
 |  |
 | உரை | 
		
			|  |  |  | 
					
			
			|  | | 5. | கோடு உயர் தோற்ற மலைமேல் இருங் கொண்மூக் கூடி நிரந்து தலை பிணங்கி, ஓடி,
 வளி கலந்து, வந்து உறைக்கும் வானம் காண்தோறும்,
 துளி கலந்து வீழ்தரும், கண்.
 |  |
 | உரை | 
		
			|  |  |  | 
					
			
			|  | | 6. | முல்லை நறு மலர் ஊதி, இருந் தும்பி செல்சார்வு உடையார்க்கு இனியவாய்,-நல்லாய்!-மற்று
 யாரும் இல் நெஞ்சினேம் ஆகி உறைவேமை
 ஈரும், இருள் மாலை வந்து.
 |  |
 | உரை | 
		
			|  |  |  | 
					
			
			|  | | 7. | தேரோன் மலை மறைந்த செக்கர் கொள் புன் மாலை ஊர் ஆன்பின் ஆயன் உவந்து ஊதும், சீர்சால்,
 சிறு குழல் ஓசை,-செறிதொடி!-வேல் கொண்டு
 எறிவது போலும் எனக்கு.
 |  |
 | உரை | 
		
			|  |  |  | 
					
			
			|  | | 8. | பிரிந்தவர் மேனிபோல் புல்லென்ற வள்ளி, பொருந்தினர் மேனிபோல், பொற்ப,-திருந்திழாய்!-
 வானம் பொழியவும் வாரார்கொல், இன்னாத
 கானம் கடந்து சென்றார்?
 |  |
 | உரை | 
		
			|  |  |  | 
					
			
			|  | | 'பருவம்' என்று அழிந்த கிழத்தியைத் தோழி, 'பருவம் அன்று' என்று வற்புறுத்தியது |  |
 | 9. | வருவர்-வயங்கிழாய்!-வாள் ஒண் கண் நீர் கொண்டு, உருகி, உடன்று அழிய வேண்டா; தெரிதியேல்,
 பைங் கொடி முல்லை அவிழ் அரும்பு ஈன்றன,
 வம்ப மழை உரறக் கேட்டு.
 |  |
 | உரை | 
		
			|  |  |  | 
					
			
			|  | | வினை முற்றிய தலைமகன் தேர்ப்பாகன் கேட்பச் சொல்லியது |  |
 | 10. | நூல் நவின்ற பாக! தேர் நொவ்விதாச் சென்றீக! தேன் நவின்ற கானத்து எழில் நோக்கி, தான் நவின்ற
 கற்புத் தாள் வீழ்த்து, கவுள் மிசைக் கை ஊன்றி,
 நிற்பாள் நிலை உணர்கம் யாம்.
 |  |
 | உரை | 
		
			|  |  |  |