தொடக்கம் |
|
|
2. குறிஞ்சி பகற்குறிக்கண் தலைமகன் சிறைப்புறத்தானாக, தோழி தலைமகட்குச் சொல்லுவாளாய், செறிப்பு அறிவுறீஇயது | |
11. | பொன் இணர் வேங்கை கவினிய பூம் பொழிலுள் நன் மலை நாடன் நலம் புனைய,-மென்முலையாய்!- போயின, சில் நாள் புனத்து மறையினால் ஏயினர் இன்றி, இனிது. | |
|
உரை
|
|
|
|
|
பகற்குறி வந்து பெயர்கின்ற தலைமகனைக் கண்ணுற்றுத் தோழி செறிப்பு அறிவுறீஇயது | |
12. | மால் வரை வெற்ப! வணங்கு குரல் ஏனல் காவல் இயற்கை ஒழிந்தேம், யாம்; தூ அருவி பூக் கண் கழூஉம் புறவிற்றாய், பொன் விளையும் பாக்கம் இது, எம் இடம். | |
|
உரை
|
|
|
|
|
சிறைப்புறத்தானாகத் தலைமகனை இயற்பழித்த தோழிக்குத் தலைமகள் இயற்பட மொழிந்தது | |
13. | ‘கானக நாடன் கலவான் என் தோள்!’ என்று,- மான் அமர் கண்ணாய்!-மயங்கல் நீ! நானம் கலந்து இழியும் நல் மலைமேல் வால் அருவி ஆட, புலம்பும் அகன்று நில்லா! | |
|
உரை
|
|
|
|
|
தோழி தலைமகட்கு மெலிதாகச் சொல்லி, குறை நயப்புக் கூறியது | |
14. | புனை பூந் தழை அல்குல் பொன் அன்னாய்! சாரல் தினை காத்து இருந்தேம் யாம் ஆக, வினை வாய்த்து மா வினவுவார் போல வந்தவர் நம்மாட்டுத் தாம் வினவல் உற்றது ஒன்று உண்டு. | |
|
உரை
|
|
|
|
|
பகற்குறிக்கண் தலைமகன் சிறைப்புறத்தானாக தோழி, தாய் கேட்டதற்கு மறு மாற்றம் சொல்லுவாள் போலப் படைத்து மொழி கிளவியான்வரைவு கடாயது | |
15. | வேங்கை நறு மலர் வெற்பிடை யாம் கொய்து, மாந் தளிர் மேனி வியர்ப்ப, மற்று ஆங்கு எனைத்தும் பாய்ந்து அருவி ஆடினேம் ஆக, பணிமொழிக்குச் சேந்தனவாம், சேயரிக் கண்தாம். | |
|
உரை
|
|
|
|
|
இரவுக்குறி வந்து பெயரும் தலைமகனைக் கண்ணுற்று நின்ற தோழி வரைவு கடாயது | |
16. | கொடு வரி வேங்கை பிழைத்து, கோட்பட்டு,- மடி செவி வேழம்-இரீஇ, அடி ஓசை அஞ்சி, ஒதுங்கும் அதர் உள்ளி, ஆர் இருள் துஞ்சா, சுடர்த்தொடி கண். | |
|
உரை
|
|
|
|
|
17. | ‘மஞ்சு இவர் சோலை வள மலை நல் நாட! எஞ்சாது நீ வருதி’ என்று எண்ணி, அஞ்சி, திரு ஒடுங்கும் மென் சாயல் தேம் கோதை மாதர் உரு ஒடுங்கும், உள் உருகி நின்று. | |
|
உரை
|
|
|
|
|
தோழி செறிப்பு அறிவுறீஇ, தலைமகனை வரைவு கடாயது | |
18. | எறிந்து, எமர்தாம் உழுத ஈர்ங் குரல் ஏனல், மறந்தும், கிளி இனமும் வாரா;-கறங்கு அருவி மா மலை நாட!-மட மொழிதன் கேண்மை நீ மறவல் நெஞ்சத்துக் கொண்டு. | |
|
உரை
|
|
|
|
|
தோழி இரவுக்குறியின்கண் நெறி விலக்கி, வரைவு கடாயது | |
19. | நெடு மலை நல் நாட! நீள் வேல் துணையா, கடு விசை வால் அருவி நீந்தி, நடு இருள், இன்னா அதர் வர, ‘ஈர்ங் கோதை மாதராள் என்னாவாள்!’ என்னும், என் நெஞ்சு. | |
|
உரை
|
|
|
|
|
தலைமகள் தோழிக்கு அறத்தொடு நின்று வெறி விலக்கவேண்டும் உள்ளத்தாளாய்ச் சொல்லியது | |
20. | வெறி கமழ் வெற்பன் என் மெய்ந் நீர்மை கொண்டது அறியாள், மற்று அன்னோ! ‘அணங்கு அணங்கிற்று!’ என்று, மறி ஈர்த்து உதிரம் தூய், வேலன்-தரீஇ, வெறியோடு அலம்வரும், யாய். | |
|
உரை
|
|
|
|