| தொடக்கம் | 
		
		
				|  | 
					
			
			|  | | 3. மருதம் பாணற்குத் தலைமகள் வாயில் மறுத்தது
 |  |
 | 21. | கொண்டுழிப் பண்டம் விலை ஒரீஇக் கொற்சேரி நுண் துளைத் துன்னூசி விற்பாரின், ஒன்றானும்
 வேறு அல்லை,-பாண!-வியல் ஊரன் வாய்மொழியைத்
 தேற, எமக்கு உரைப்பாய், நீ.
 |  |
 | உரை | 
		
			|  |  |  | 
					
			
			|  | | 22. | போது ஆர் வண்டு ஊதும் புனல் வயல் ஊரற்குத் தூதாய்த் திரிதரும் பாண் மகனே! நீ தான்
 அறிவு அயர்ந்து, எம் இல்லுள் என் செய்ய வந்தாய்?
 நெறி அதுகாண், எங்கையர் இற்கு.
 |  |
 | உரை | 
		
			|  |  |  | 
					
			
			|  | | 23. | யாணர் அகல் வயல் ஊரன் அருளுதல்,- பாண!-பரிந்து உரைக்க வேண்டுமோ? மாண
 அறிவது அறியும் அறிவினார் கேண்மை
 நெறியே உரையாதோ மற்று?
 |  |
 | உரை | 
		
			|  |  |  | 
					
			
			|  | | 24. | கோலச் சிறு குருகின் குத்து அஞ்சி, ஈர் வாளை நீலத்துப் புக்கு ஒளிக்கும் ஊரற்கு, மேல் எல்லாம்,
 சார்தற்குச் சந்தனச் சாந்து ஆயினேம்; இப் பருவம்
 காரத்தின் வெய்ய, என் தோள்!
 |  |
 | உரை | 
		
			|  |  |  | 
					
			
			|  | | வாயில் வேண்டிச் சென்றார்க்குத் தலைமகள் வாயில் மறுத்தது |  |
 | 25. | அழல் அவிழ் தாமரை ஆய் வயல் ஊரன் விழைதகு மார்பம் உறும், நோய்-விழையின்,
 குழலும் குடுமி என் பாலகன் கூறும்
 மழலை வாய்க் கட்டுரையால்.
 |  |
 | உரை | 
		
			|  |  |  | 
					
			
			|  | | புதல்வனை முனிந்து, தலைமகள் மறுத்தாளைப் போல, தோழிக்கு வாயில் நேர்ந்தது |  |
 | 26. | பெய் வளைக் கையாய்! பெரு நகை ஆகின்றே- செய் வயல் ஊரன் வதுவை விழவு இயம்ப,
 கை புனை தேர் ஏறிச் செல்வானைச் சென்று இவன்
 எய்தி, இடர் உற்றவாறு!
 |  |
 | உரை | 
		
			|  |  |  | 
					
			
			|  | | வாயில் வேண்டிச் சென்றார்க்குத் தலைமகள் வாயில் மறுத்தது |  |
 | 27. | தண் வயல் ஊரற் புலக்கும் தகையமோ?- நுண் அறல் போல நுணங்கிய ஐங் கூந்தல்,
 வெண் மரல் போல நிறம் திரிந்து, வேறாய
 வண்ணம் உடையேம், மற்று யாம்.
 |  |
 | உரை | 
		
			|  |  |  | 
					
			
			|  | | தலைமகள் தோழிக்கு வாயில் மறுத்தது |  |
 | 28. | ஒல்லென்று ஒலிக்கும் ஒலி புனல் ஊரற்கு வல்லென்றது என் நெஞ்சம்-வாள்கண்ணாய்!-'நில்' என்னாது,
 ஏக்கற்று ஆங்கு என் மகன்தான் நிற்ப, என்னானும்
 நோக்கான், தேர் ஊர்ந்தது கண்டு.
 |  |
 | உரை | 
		
			|  |  |  | 
					
			
			|  | | ஆற்றாமையே வாயிலாகப் புக்க தலைமகன் புணர்ந்து நீங்கிய பின்பு, சென்ற தோழிக்குத் தலைமகள் சொல்லியது
 |  |
 | 29. | ஒல்லென் ஒலி புனல் ஊரன் வியல் மார்பம் புல்லேன் யான்’ என்பேன்;-புனையிழையாய்!-புல்லேன்
 எனக்கு ஓர் குறிப்பும் உடையேனோ, ஊரன்-
 தனக்கு ஏவல் செய்து ஒழுகுவேன்?
 |  |
 | உரை | 
		
			|  |  |  | 
					
			
			|  | | 30. | குளிரும் பருவத்தேஆயினும், தென்றல் வளி எறியின், மெய்யிற்கு இனிதாம்;-ஒளியிழாய்!-
 ஊடி இருப்பினும், ஊரன் நறு மேனி
 கூடல் இனிது ஆம், எனக்கு.
 |  |
 | உரை | 
		
			|  |  |  |