தொடக்கம் |
|
|
4. பாலை பருவம் கண்டு அழிந்த தலைமகள், தோழிக்குச் சொல்லியது | |
31. | உதிரம் துவரிய வேங்கை உகிர்போல், எதிரி முருக்கு அரும்ப, ஈர்ந் தண் கார் நீங்க, எதிருநர்க்கு இன்பம் பயந்த இளவேனில் காண்தொறும், துன்பம் கலந்து அழியும், நெஞ்சு. | |
|
உரை
|
|
|
|
|
தலைமகனது பிரிவுக் குறிப்பு அறிந்து ஆற்றாளாய தலைமகளைத் தோழி ஆற்றுவித்தது | |
32. | விலங்கல்; விளங்கிழாய்! செல்வாரோ அல்லர் அழல் பட்டு அசைந்த பிடியை, எழில் களிறு, கல் சுனைச் சேற்றிடைச் சின்னீரைக் கையால் கொண்டு, உச்சி ஒழுக்கும் சுரம். | |
|
உரை
|
|
|
|
|
மகள் போக்கிய நற்றாய் கவன்று சொல்லியது | |
33. | பாவையும், பந்தும், பவளவாய்ப் பைங் கிளியும், ஆயமும், ஒன்றும், இவை நினையாள்; பால் போலும் ஆய்ந்த மொழியினாள் செல்லும்கொல், காதலன்பின், காய்ந்து கதிர் தெறூஉம் காடு? | |
|
உரை
|
|
|
|
|
தோழி, தலைமகனைச் செலவு அழுங்கியது | |
34. | கோட்டு அமை வல் வில் கொலை பிரியா வன்கண்ணர் ஆட்டிவிட்டு ஆறு அலைக்கும் அத்தம் பல நீந்தி, வேட்ட முனைவயின் சேறிரோ-ஐய!-நீர் வாள் தடங் கண் மாதரை நீத்து? | |
|
உரை
|
|
|
|
|
தலைமகன் பொருள்வயின் பிரிந்த காலத்து ஆற்றாள்!' எனக் கவன்ற தோழிக்குத் தலைமகள், 'ஆற்றுவல்' என்பதுபட மொழிந்தது | |
35. | கொடு வில் எயினர் தம் கொல் படையால் வீழ்த்த தடி நிணம் மாந்திய பேஎய், நடுகல் விரி நிழல், கண்படுக்கும் வெங் கானம் என்பர், பொருள் புரிந்தார் போய சுரம். | |
|
உரை
|
|
|
|
|
பிரிவு உணர்த்திய தோழிக்குத் தலைமகள் உடன்படாது சொல்லியது | |
36. | கடிது ஓடும் வெண்தேரை, ‘நீர் ஆம்’ என்று எண்ணி, பிடியோடு ஒருங்கு ஓடி, தாள் பிணங்கி, வீழும் வெடி ஓடும் வெங் கானம் சேர்வார்கொல்,-நல்லாய்!- தொடி ஓடி வீழத் துறந்து? | |
|
உரை
|
|
|
|
|
உடன் போய தலைமகட்கு, நற்றாய் கவன்று உரைத்தது | |
37. | தோழியர் சூழத் துறை முன்றில் ஆடுங்கால், வீழ்பவள் போலத் தளரும் கால், தாழாது, கல் அதர் அத்தத்தைக் காதலன்பின் போதல் வல்லவோ, மாதர் நடை? | |
|
உரை
|
|
|
|
|
பிரிவின்கண் ஆற்றாளாயின தலைமகளைத் தோழி ஆற்றுவித்தது | |
38. | சுனை வாய்ச் சிறு நீரை, ‘எய்தாது’ என்று எண்ணி, பிணை மான் இனிது உண்ண வேண்டி, கலைமா தன் கள்ளத்தின் ஊச்சும் சுரம் என்பர், காதலர் உள்ளம் படர்ந்த நெறி. | |
|
உரை
|
|
|
|
|
தலைமகன் பொருள் வலித்த நெஞ்சிற்குச் சொல்லிச் செலவழுங்கியது | |
39. | மடவைகாண்;-நல் நெஞ்சே!-மாண் பொருள்மாட்டு ஓட, புடைபெயர் போழ்தத்தும் ஆற்றாள், படர் கூர்ந்து விம்மி உயிர்க்கும் விளங்கிழையாள் ஆற்றுமோ, நம்மின் பிரிந்த இடத்து? | |
|
உரை
|
|
|
|
|
40. | இன்று அல்கல் ஈர்ம் படையுள் ஈர்ங்கோதை தோள் துணையா நன்கு வதிந்தனை;-நல் நெஞ்சே!-நாளை நாம் குன்று அதர் அத்தம் இறந்து, தமியமாய், என்கொலோ சேக்கும் இடம்? | |
|
உரை
|
|
|
|