முலையா ளணிகுழறாழ் வேய்த்தோள் பெரும்பீர் பசப்பித்தீர் பேர்ந்து. [பருவங்கண்டு ஆற்றாளாய தலைமகள் ஆற்றல் வேண்டித் தோழி தான் ஆற்றாளாய்ச் சொல்லியது.] (பத.) குருந்தே - குருந்த மரமே! கொடி முல்லாய் - கொடியாகப் படர்ந்துள்ள முல்லைச் செடியே! கொன்றாய் - கொன்றை மரமே! தளவே - செம்முல்லைச் செடியே! முருந்து - மயிற்பீலியினடிப்பாகத்தினை யொத்த, எயிறு ஓடு - பற்களுடனே, தார் - பூமாலையினையும், பூப்பித்து இருந்து - தன்பால் விளங்கக் கொண்டிருந்து, அரும்பு - கோங்கினது அரும்பின் தன்மையையும், ஈர் - சிதைக்கும் படியான, முலையாள் - முலைகளையுடைய என் தலைவியின், அணி - அழகிய, குழல் - கூந்தல், தாழ் - தொங்கிப் புரளும்படியான, வேய் - மூங்கிலை யொத்த, தோள் - தோள்களை, பெரும் - பெரிய, பீர் - பீர்க்கம் பூவின் நிறம் போன்று, பேர்ந்து - மீளவும், பசப்பித்தீர் - பசலை பூக்கச் செய்யலானீர். (இஃதென் கொடுமை! என்று தோழி வருத்தமிக்கவளாய்க் கூறினாள்.) (ப-ரை.) குருந்தே! கொடி முல்லாய்! கொன்றாய்! தளவே! பீலி முருந்தினையொக்கும் இவளெயிற்றுடனே பூமாலையையும் பூப்பித் திருந்து கோங்கரும்பு முதலாயினவற்றை வென்று சிதைக்கும் முலையினை யுடையாளுடைய குழறாழ்ந்த நிறைந்த வேய்த்தோள்களைப் பெரும்பீர் நிறம் போலப் பசப்பித்தீர் மீட்டும் (விரி.) முருந்தே, இருந்தே என்பவற்றிலுள்ள ஏகாரங்கள் இசைநிறைப் பொருளன. வேய்த்தோள் - உவமைத் தொகை. (116) கதநாகம் புற்றடையக் காரேறு சீற மதநாக மாறு முழங்கப் - புதனாகம் பொன்பயந்த வெள்ளி புறமாகப் பூங்கோதாய்! என்பசந்த மென்றோ ளினி.
|