தொடக்கம் |
|
|
2. நெய்தல்பாங்கற்குச் சொல்லியது | |
32. | பானல் அம் தண் கழிப் பாடு அறிந்து, தன்னைமார் நூல் நல நுண் வலையால் நொண்டு எடுத்த கானல் படு புலால் காப்பாள் படை நெடுங் கண் நோக்கம் கடிபு ஒல்லா; என்னையே காப்பு. | |
|
உரை
|
|
|
|
|
33. | பெருங் கடல் வெண் சங்கு காரணமா, பேணாது இருங் கடல் மூழ்குவார் தங்கை, இருங் கடலுள் முத்து அன்ன, வெண் முறுவல் கண்டு உருகி, நைவார்க்கே ஒத்தனம், யாமே உளம். | |
|
உரை
|
|
|
|
|
புணர்ந்து நீங்கும் தலைமகனைக் கண்ணுற்று நின்ற தோழி வரைவு கடாயது | |
34. | தாமரைதான் முகமா, தண் அடை ஈர் மா நீலம் காமர் கண் ஆக, கழி துயிற்றும் காமரு சீர்த் தண் பரப்ப! பாய் இருள் நீ வரின், தாழ் கோதையாள் கண் பரப்ப, காண், நீர் கசிந்து. | |
|
உரை
|
|
|
|
|
'இரவும் பகலும் வாரல்' என்று தலைமகனைத் தோழி வரைவு கடாயது | |
35. | புலால் அகற்றும் பூம் புன்னைப் பொங்கு நீர்ச் சேர்ப்ப! நிலா அகற்றும் வெண் மணல் தண் கானல், சுலா அகற்றி, கங்குல் நீ வாரல்; பகல் வரின், மாக் கவ்வை ஆம், மங்குல் நீர் வெண் திரையின்மாட்டு. | |
|
உரை
|
|
|
|
|
36. | ‘முருகு வாய் முள் தாழை நீள் முகை பார்ப்பு’ என்றே குருகு வாய்ப் பெய்து, இரை கொள்ளாது, உருகி மிக இன்னா வெயில் சிறகால் மறைக்கும் சேர்ப்ப! நீ மன்னா வரவு மற! | |
|
உரை
|
|
|
|
|
37. | ஓத நீர் வேலி உரை கடியாப் பாக்கத்தார், காதல், நீர் வாராமை கண் நோக்கி, ஓத நீர் அன்று அறியும்; ஆதலால், வாராது, அலர் ஒழிய, மன்று அறியக் கொள்ளீர், வரைந்து. | |
|
உரை
|
|
|
|
|
காமம் மிக்க கழிபடர் கிளவி | |
38. | மாக் கடல் சேர் வெண் மணல் தண் கானல் பாய் திரை சேர் மாக் கடல் சேர் தண் பரப்பன் மார்பு அணங்கா மாக் கடலே! என் போலத் துஞ்சாய்; இது செய்தார் யார்-உரையாய்!- என்போலும் துன்பம் நினக்கு? | |
|
உரை
|
|
|
|
|
நொதுமலர் வரைந்து புகுந்த பருவத்து, தோழி செவிலிக்கு அறத்தொடு நின்றது | |
39. | தந்தார்க்கே ஆமால், தட மென் தோள்-இன்ன நாள் வந்தார்க்கே ஆம் என்பார் வாய் காண்பாம்;-வந்தார்க்கே காவா இள மணல் தண் கழிக் கானல்வாய்ப் பூவா இள ஞாழல் போது. | |
|
உரை
|
|
|
|
|
வலிதாகச் சொல்லிக் குறை நயப்பித்தது | |
40. | தன் துணையோடு ஆடும் அலவனையும் தான் நோக்கா, ‘இன் துணையோடு ஆட இயையுமோ? இன் துணையோடு ஆடினாய் நீ ஆயின், அந் நோய்க்கு என் நொந்து? என்று போயினான் சென்றான், புரிந்து. | |
|
உரை
|
|
|
|
|
தலைமகன் சிறைப்புறத்தானாகத் தோழியால் சொல் எடுக்கப்பட்டு, தலைமகள் தனது ஆற்றாமையால் சொல்லியது | |
41. | உருகுமால் உள்ளம், ஒரு நாளும் அன்றால்; பெருகுமால், நம் அலர் பேண,-பெருகா ஒருங்கு வால் மின்னோடு, உரும் உடைத்தாய், பெய்வான், நெருங்கு வான் போல, நெகிழ்ந்து. | |
|
உரை
|
|
|
|
|
42. | கவளக் களிப்பு இயல் மால் யானை, சிற்றாளி தவழ, தான் நில்லாததுபோல், பவளக் கடிகையிடை முத்தம் காண்தொறும், நில்லா- தொடி கையிடை முத்தம் தொக்கு. | |
|
உரை
|
|
|
|
|
தலைமகனைத் தோழி வரைவு கடாயது | |
43. | கடற் கோடு இரு மருப்பு, கால் பாகன் ஆக, அடற் கோட்டு யானை திரையா, உடற்றி, கரை பாய் நீள் சேர்ப்ப! கனை இருள் வாரல்! வரைவாய், நீ, ஆகவே வா! | |
|
உரை
|
|
|
|
|
44. | கடும் புலால் புன்னை கடியும் துறைவ! படும் புலால் புள் கடிவான் புக்க, தடம் புல் ஆம் தாழை, மா ஞாழல், ததைந்து உயர்ந்த தாழ் பொழில், ஏழை மான் நோக்கி இடம். | |
|
உரை
|
|
|
|
|
தலைமகன் சொல்லிய குறி வழி அறிந்து, தலைமகளைக் கண்ட பாங்கன் தலைமகனை வியந்து சொல்லியது | |
45. | தாழை தவழ்ந்து உலாம் வெண் மணல் தண் கானல், மாழை நுளையர் மட மகள், ஏழை, இணை நாடில் இல்லா, இருந் தடங் கண் கண்டும், துணை நாடினன்; தோம் இலன்! | |
|
உரை
|
|
|
|
|
தோழி நெறி விலக்கி, வரைவு கடாயது | |
46. | தந்து, ஆயல் வேண்டா; ஓர் நாள் கேட்டு, தாழாது வந்தால், நீ எய்துதல் வாயால் மற்று; எந்தாய்! மறி மகர வார் குழையாள் வாழாள்; நீ வாரல், எறி மகரம் கொட்கும் இரா. | |
|
உரை
|
|
|
|
|
பாங்கன் தலைமகனைக் கண்டு, தலைமகளை வியந்து சொல்லியது | |
47. | பண்ணாது, பண்மேல் தேன் பாடும் கழிக் கானல், எண்ணாது கண்டார்க்கே ஏர் அணங்கால்; எண்ணாது சாவார் சான்றாண்மை சலித்திலா மற்று இவளைக் காவார், கயிறுரீஇ விட்டார். | |
|
உரை
|
|
|
|
|
தலைமகற்கு இரவுக்குறி மறுத்தது | |
48. | திரை மேல் போந்து எஞ்சிய தணெ் கழிக் கானல் விரை மேவும் பாக்கம் விளக்கா, கரைமேல், விடுவாய்ப் பசும் புற இப்பி கால் முத்தம் படு வாய் இருள் அகற்றும், பாத்து. | |
|
உரை
|
|
|
|
|
49. | எங்கு வருதி, இருங் கழித் தண் சேர்ப்ப! பொங்கு திரை உதைப்பப் போந்து ஒழிந்த சங்கு நரன்று உயிர்த்த நித்திலம் நள் இருள் கால் சீக்கும்; வரன்று உயிர்த்த பாக்கத்து வந்து? | |
|
உரை
|
|
|
|
|
50. | திமில் களிறு ஆக, திரை பறையா, பல் புள் துயில் கெடத் தோன்றும் படையா, துயில்போல் குறியா வரவு ஒழிந்து, கோல நீர்ச் சேர்ப்ப! நெறியால் நீ கொள்வது நேர். | |
|
உரை
|
|
|
|
|
தலைமகற்குத் தோழி குறை நேர்ந்து, பகற்குறியிடம் அறியச் சொல்லியது | |
51. | கடும் புலால் வெண் மணல் கானல் உறு மீன்கண் படும் புலால் பார்த்தும்; பகர்தும்; அடும்பு எலாம்- சாலிகைபோல் வலை சாலப் பல உணங்கும்;- பாலிகை பூக்கும் பயின்று. | |
|
உரை
|
|
|
|
|
தலைமகனைத் தோழி வரைவு கடாயது | |
52. | திரை பாகன் ஆக, திமில் களிறு ஆக, கரை சேர்ந்த கானல் படையா, விரையாது- வேந்து கிளர்ந்தன்ன வேலை நீர்ச் சேர்ப்ப!-நாள் ஆய்ந்து, வரைதல் அறம். | |
|
உரை
|
|
|
|
|
53. | பாறு புரவியா, பல் களிறு நீள் திமிலா, தேறு திரை பறையா, புள் படையா, தேறாத மன் கிளர்ந்த போலும் கடல் சேர்ப்ப! மற்று எமர்- முன் கிளர்ந்து எய்தல் முடி! | |
|
உரை
|
|
|
|
|
54. | வாராய்; வரின், நீர்க் கழிக் கானல் நுண் மணல்மேல் தேரின் மா கால் ஆழும் தீமைத்தே; ஓர் இலோர், கோள் நாடல் வேண்டா; குறி அறிவார்க் கூஉய்க் கொண்டு, ஓர் நாள் நாடி, நல்குதல் நன்று. | |
|
உரை
|
|
|
|
|
55. | கண் பரப்ப காணாய், கடும் பனி; கால் வல் தேர் மண் பரக்கும் மா இருள் மேற்கொண்டு, மண் பரக்கு- மாறு, நீர் வேலை! நீ வாரல்! வரின், ஆற்றாள், ஏறு நீர் வேலை எதிர். | |
|
உரை
|
|
|
|
|
தலைமகற்கு இரவுக்குறி நேர்ந்த தோழி, இடம் காட்டியது | |
56. | கடற் கானல் சேர்ப்ப! கழி உலா அய்நீண்ட அடல் கானல் புன்னை, தாழ்ந்து, ஆற்ற, மடற் கானல், அன்றில் அகவும் அணி நெடும் பெண்ணைத்து-எம் முன்றில் இள மணல்மேல் மொய்த்து. | |
|
உரை
|
|
|
|
|
57. | வரு திரை தான் உலாம் வார் மணல் கானல், ஒரு திரை ஓடா அளவை, இரு திரை முன் வீழும் கானல், முழங்கு கடல் சேர்ப்ப! என் வீழல் வேண்டா, இனி. | |
|
உரை
|
|
|
|
|
தலைமகற்குத் தோழி பகற்குறி நேர்ந்து, இடம் காட்டியது | |
58. | மாயவனும் தம்முனும் போலே, மறி கடலும் கானலும் சேர் வெண் மணலும் காணாயோ-கானல் இடை எலாம், ஞாழலும் தாழையும்; ஆர்ந்த புடை எலாம், புன்னை;-புகன்று? | |
|
உரை
|
|
|
|
|
'இப்பொழுது வாரல்!' என்று, வரைவு கடாயது | |
59. | பகல் வரின், கவ்வை பல ஆம்; பரியாது, இர வரின், ஏதமும் அன்ன; புக அரிய தாழை துவளும் தரங்க நீர்ச் சேர்ப்பிற்றே, ஏழை நுளையர் இடம். | |
|
உரை
|
|
|
|
|
பாங்கற்குத் தலைமகன் கூறியது | |
60. | திரை அலறிப் பேரத் தழெியாத் திரியா, கரை அலவன் காலினால் காணா, கரை அருகே நெய்தல் மலர் கொய்யும் நீள் நெடுங் கண்ணினாள், மையல், நுளையர் மகள். | |
|
உரை
|
|
|
|
|
தலைமகற்குத் தோழி இரவுக்குறி மறுத்தது | |
61. | அறிகு அரிது, யார்க்கும்-அரவ நீர்ச் சேர்ப்ப! நெறி, திரிவார் இன்மையால், இல்லை-முறி திரிந்த கண்டல், அம் தண் தில்லை கலந்து, கழி சூழ்ந்த மிண்டல், அம் தண் தாழை, இணைந்து. | |
|
உரை
|
|
|
|
|
தலைமகளை ஒருநாள் கோலம் செய்து, அடியிற் கொண்டு முடிகாறும் நோக்கி, 'இவட்குத் தக்கான் யாவனாவன் கொல்லோ?' என்று ஆராய்ந்த செவிலிக்குத் தோழி அறத்தொடு நின்றது | |
62. | வில்லார் விழவினும், வேல் ஆழி சூழ் உலகில் நல்லார் விழவகத்தும், நாம் காணேம்;-நல்லாய்!- உவர்க்கத்து ஒரோ உதவிச் சேர்ப்பன் ஒப்பாரைச் சுவர்க்கத்து உளராயின், சூழ். | |
|
உரை
|
|
|
|