தொடக்கம் |
|
|
3. பாலைதலைமகளைத் தோழி பருவம் காட்டி, வற்புறீஇயது | |
63. | எரி நிற நீள் பிண்டி இணர் இனம் எல்லாம் வரி நிற நீள் வண்டர் பாட, புரி நிற நீள் பொன் அணிந்த, கோங்கம்;-புணர் முலையாய்!-பூந்தொடித் தோள் என் அணிந்த, ஈடு இல் பசப்பு? | |
|
உரை
|
|
|
|
|
64. | ‘பேணாய், இதன் திறத்து!’ என்றாலும், பேணாதே நாண் ஆய நல் வளையாய்! நாண் இன்மை காணாய்; எரி சிதறி விட்டன்ன, ஈர் முருக்கு; ஈடு இல் பொரி சிதறி விட்டன்ன, புன்கு. | |
|
உரை
|
|
|
|
|
சுரத்திடைச் சென்ற செவிலித்தாய் குரவொடு புலம்பியது | |
65. | தான் தாயாக் கோங்கம் தளர்ந்து முலை கொடுப்ப, ஈன்றாய் நீ பாவை, இருங் குரவே! ஈன்றாள் மொழி காட்டாய் ஆயினும், முள் எயிற்றாள் சென்ற வழி காட்டாய், ‘ஈது’ என்று, வந்து. | |
|
உரை
|
|
|
|
|
தோழி பருவம் காட்டி வற்புறுத்தியது | |
66. | வல் வரும்; காணாய்-வயங்கி, முருக்கு எல்லாம், செல்வர் சிறார்க்குப் பொற்கொல்லர்போல், நல்ல பவளக் கொழுந்தின்மேல் பொன்-தாலி பாஅய்த் திகழக் கான்றிட்டன, தேர்ந்து! | |
|
உரை
|
|
|
|
|
பருவம் கண்டு ஆற்றாளாகிய தலைமகள் தோழிக்குச் சொல்லியது | |
67. | வெறுக்கைக்குச் சென்றார், விளங்கிழாய்! தோன்றார்; ‘பொறுக்க!’ என்றால், பொறுக்கலாமோ?-ஒறுப்பபோல் பொன்னுள் உறு பவளம் போன்ற, புணர் முருக்கம்; என் உள் உறு நோய் பெரிது! | |
|
உரை
|
|
|
|
|
பொருள் வலித்த நெஞ்சிற்குத் தலைமகன் சொல்லிச் செலவு அழுங்கியது | |
68. | சென்றக்கால், செல்லும் வாய் என்னோ?-இருஞ் சுரத்து நின்றக்கால், நீடி ஒளி விடா,-நின்ற இழைக்கு அமர்ந்த ஏய் ஏர் இளமுலையாள் ஈடு இல் குழைக்கு அமர்ந்த நோக்கின் குறிப்பு! | |
|
உரை
|
|
|
|
|
இடைச் சுரத்துக் கண்டார் செலவு விலக்கியது | |
69. | அத்தம் நெடிய; அழற் கதிரோன் செம்பாகம் அத்தம் மறைந்தான்; இவ் அணியிழையோடு, ஒத்த தகையினால், எம் சீறூர்த் தங்கினிராய், நாளை வகையினிராய்ச் சேறல் வனப்பு. | |
|
உரை
|
|
|
|
|
புணர்ந்து உடன் போய தலைமகன், தலைமகளை ஆற்றுவித்துக் கொண்டு போவான், சொல்லியது | |
70. | நின் நோக்கம் கொண்ட மான், தண் குரவ நீழல், காண்; பொன் நோக்கம் கொண்ட பூங் கோங்கம் காண்;-பொன்நோக்கம் கொண்ட சுணங்கு அணி மென் முலைக் கொம்பு அன்னாய்!- வண்டல் அயர், மணல்மேல் வந்து! | |
|
உரை
|
|
|
|
|
சுரத்திடைச் சென்ற செவிலிக்குத் தலைமகனையும் தலைமகளையும் கண்டார் சொல்லிய வார்த்தையைத் தாங்கள் கேட்டார்க்குச் சொல்லி ஆற்றுவித்தது | |
71. | அம் சுடர் நீள் வாள் முகத்து ஆயிழையும், மாறு இலா வெஞ் சுடர் நீள் வேலானும், போதரக் கண்டு, அஞ்சி, ‘ஒரு சுடரும் இன்றி உலகு பாழாக, இரு சுடரும் போந்தன!’ என்றார். | |
|
உரை
|
|
|
|
|
சுரத்திடைச் சென்ற செவிலியைத் தலைமகளைக் கண்டார் சொல்லி ஆற்றுவித்தது | |
72. | “முகம் தாமரை; முறுவல் ஆம்பல்; கண் நீலம்; இகந்து ஆர் விரல் காந்தள்” என்று என்று, உகந்து இயைந்த மாழை மா வண்டிற்கு ஆம் நீழல், வருந்தாதே, ஏழைதான் செல்லும், இனிது.’ | |
|
உரை
|
|
|
|
|
முன்னை ஞான்று, உடன்போக்கு வலித்து, தலைமகனையும் தலைமகளையும் உடன்படுவித்து, பின்னை அறத்தொடு நிலை மாட்சிமைப்பட்டமையால் தலைமகளைக் கண்டு, தோழி உடன்போக்கு அழுங்குவித்தது | |
73. | செவ் வாய், கரிய கண், சீரினால் கேளாதும், கவ்வையால் காணாதும், ஆற்றாதும், அவ் ஆயம், தார்த் தத்தை வாய் மொழியும், தண் கயத்து நீலமும், ஓர்த்து ஒழிந்தாள்-என் பேதை ஊர்ந்து. | |
|
உரை
|
|
|
|
|
காமம் மிக்க கழிபடர் கிளவி; நிலத்தான் பாலை; ஒழுக்கத்தான் நெய்தல் | |
74. | புன் புறவே! சேவலோடு ஊடல் பொருள் அன்றால்; அன்பு உறவே உடையார் ஆயினும், வன்புற்- றது காண்! அகன்ற வழி நோக்கி, பொன் போர்த்து, இது காண், என் வண்ணம், இனி! | |
|
உரை
|
|
|
|
|
மகட் போக்கிய தாய் சொல்லியது | |
75. | எரிந்து சுடும் இரவி ஈடு இல் கதிரான், விரிந்து விடு கூந்தல் வெஃகா, புரிந்து விடு கயிற்றின் மாசுணம் வீயும் நீள் அத்தம், அடு திறலான் பின் சென்ற ஆறு. | |
|
உரை
|
|
|
|
|
பொருள் வலித்த நெஞ்சிற்குச் சொல்லித் தலைமகன் செலவு அழுங்கியது | |
76. | நெஞ்சம்! நினைப்பினும், நெல் பொரியும் நீள் அத்தம், ‘அஞ்சல்!’ என ஆற்றின், அஞ்சிற்றால்; அஞ்சி, புடை நெடுங் காது உறப் போழ்ந்து அகன்று நீண்ட படை நெடுங் கண் கொண்ட, பனி. | |
|
உரை
|
|
|
|
|
வினை முற்றிய தலைமகன் தலைமகளை நினைந்த இடத்து, தலைமகள் வடிவு தன் முன் நின்றாற் போல வந்து தோன்ற, அவ் வடிவை நோக்கிச் சொல்லி, ஆற்றுவிக்கின்றது | |
77. | வந்தால்தான், செல்லாமோ-ஆர் இடையாய்!-வார் கதிரால், வெந்தால்போல் தோன்றும் நீள் வேய் அத்தம், தந்து ஆர் தகரக் குழல் புரள, தாழ் துகில் கை ஏந்தி, மகரக் குழை மறித்த நோக்கு? | |
|
உரை
|
|
|
|
|
'ஆற்றாள்!' எனக் கவன்ற தோழிக்கு, 'ஆற்றுவல்' என்பதுபடச் சொல்லியது | |
78. | ஒரு கை, இரு மருப்பின், மும் மத, மால், யானை பருகு நீர் பைஞ் சுனையில் காணாது, அருகல், வழி விலங்கி வீழும் வரை அத்தம் சென்றார், அழிவிலர் ஆக, அவர்! | |
|
உரை
|
|
|
|
|
பருவம் காட்டி, தலைமகளைத் தோழி வற்புறுத்தியது | |
79. | சென்றார் வருதல், செறிதொடி! சேய்த்துஅன்றால்; நின்றார் சொல் தேறாதாய், நீடு இன்றி, வென்றார் எடுத்த கொடியின் இலங்கு அருவி தோன்றும் கடுத்த மலை நாடு காண்! | |
|
உரை
|
|
|
|
|
80. | உருவ வேல் கண்ணாய்! ஒரு கால் தேர்ச் செல்வன் வெருவ, வீந்து உக்க நீள் அத்தம், வருவர், சிறந்து பொருள் தருவான் சேட் சென்றார் இன்றே; இறந்து கண், ஆடும் இடம். | |
|
உரை
|
|
|
|
|
தலைமகள் இற்செறிப்புக் கண்ட பின்னை, அவள் நீங்கிய புனம் கண்டு, ஆற்றானாய் மீள்கின்ற தலைமகன் சொல்லியது; சுரத்திடைச் சென்ற செவிலித்தாய் சொல்லியதூஉம் ஆம் | |
81. | கொன்றாய்! குருந்தே! கொடி முல்லாய்! வாடினீர்; நின்றேன் அறிந்தேன்; நெடுங்கண்ணாள் சென்றாளுக்கு என் உரைத்தீர்க்கு, என் உரைத்தாட்கு, என் உரைத்தீர்க்கு, என் உரைத்தாள்- மின் நிரைத்த பூண் மிளிர விட்டு? | |
|
உரை
|
|
|
|
|
தலைமகனது செலவுக் குறிப்பு அறிந்து ஆற்றாளாய தலைமகளைத் தோழி உலகினது இயற்கை கூறி, ஆற்றாது உடன்படுத்துவித்தது | |
82. | ஆண் கடன் ஆம் ஆற்றை ஆயுங்கால், ஆடவர்க்குப் பூண் கடனாப் போற்றிப் புரிந்தமையால், பூண் கடனாச் செய் பொருட்குச் செல்வரால்;-சின்மொழி!-நீ சிறிது நை பொருட்கண் செல்லாமை நன்று. | |
|
உரை
|
|
|
|
|
தலைமகன் செலவு உணர்த்திய தோழிக்குத் தலைமகள் உடன்படாது சொல்லியது | |
83. | செல்பவோ? சிந்தனையும் ஆகாதால்; நெஞ்சு எரியும்; வெல்பவோ, சென்றார் வினை முடிய?-நல்லாய்! இதடி கரையும்; கல் மா போலத் தோன்றும்; சிதடி கரையும், திரிந்து. | |
|
உரை
|
|
|
|
|
84. | கள்ளிஅம் காட்ட கடமா இரிந்து ஓட, தள்ளியும் செல்பவோ, தம்முடையார்-கொள்ளும் பொருள் இலர் ஆயினும், பொங்கெனப் போந்து எய்யும் அருள் இல் மறவர் அதர்? | |
|
உரை
|
|
|
|
|
தலைமகனைத் தோழி செலவு அழுங்குவித்தது | |
85. | ‘பொருள் பொருள்’ என்றார் சொல் பொன் போலப் போற்றி, அருள் பொருள் ஆகாமை ஆக; அருளான், வளமை கொணரும் வகையினான், மற்று ஓர் இளமை கொணர இசை! | |
|
உரை
|
|
|
|
|
தலைமகள் தோழிக்குச் செலவு உடன்படாது சொல்லியது | |
86. | ஒல்வார் உளரேல், உரையாய்!-'ஒழியாது, செல்வார்’ என்றாய்; நீ சிறந்தாயே!-செல்லாது அசைந்து ஒழிந்த யானை, பசியால், ஆள் பார்த்து, மிசைந்து ஒழியும் அத்தம் விரைந்து. | |
|
உரை
|
|
|
|
|
புணர்ந்து உடன்போக்கு நயப்பித்த தோழிக்குத் தலைமகள் உடன்பட்டுச் சொல்லியது | |
87. | ஒன்றானும் நாம் மொழியலாமோ-செலவு தான் பின்றாது, பேணும் புகழான் பின்;-பின்றா வெலற்கு அரிதாம் வில் வலான், வேல் விடலை, பாங்காச் செலற்கு அரிதாச் சேய சுரம்? | |
|
உரை
|
|
|
|
|
புணர்ந்து உடன் போவான் ஒருப்பட்ட தலைமகள் தோழிக்குச் சொல்லியது | |
88. | அல்லாத என்னையும் தீர, மற்று ஐயன்மார் பொல்லாதது என்பது நீ பொருந்தாய், எல்லார்க்கும், வல்லி ஒழியின்,-வகைமை நீள் வாட் கண்ணாய்! புல்லி ஒழிவான், புலந்து. | |
|
உரை
|
|
|
|
|
சுரத்திடைச் சென்ற செவிலிக்குத் தலைமகனையும் தலைமகளையும் கண்டமை எதிர்ப்பட்டார் சொல்லி, ஆற்றுவித்தது | |
89. | நண்ணி, நீர் சென்மின்; நமர் அவர் ஆபவேல், எண்ணிய எண்ணம் எளிதுஅரோ, எண்ணிய வெஞ்சுடர் அன்னானை யான் கண்டேன்; கண்டாளாம், தண்சுடர் அன்னாளை, தான். | |
|
உரை
|
|
|
|
|
'தன்னும் அவனும்' என்பதனுள், 'நன்மை தீமை' என்பதனால், நற்றாய் படிமத்தாளை வினாயது | |
90. | வேறாக நின்னை வினவுவேன்; தெய்வத்தான் கூறாயோ? கூறும் குணத்தினனாய், வேறாக- என் மனைக்கு ஏறக் கொணருமோ?-எல்வளையைத் தன் மனைக்கே உய்க்குமோ, தான்? | |
|
உரை
|
|
|
|
|
தலைமகன் செலவு உடன்படாத தலைமகள் தோழிக்குச் சொல்லியது | |
91. | கள்ளி, சார், கார் ஓமை, நார் இல் பூ நீள் முருங்கை, நள்ளிய வேய், வாழ்பவர் நண்ணுபவோ-புள்ளிப் பருந்து கழுகொடு வம்பலர்ப் பார்த்து, ஆண்டு, இருந்து உறங்கி, வீயும் இடம்? | |
|
உரை
|
|
|
|
|
92. | செல்பவோ, தம் அடைந்தார் சீர் அழிய-சிள் துவன்றி, கொல்பபோல் கூப்பிடும்; வெங் கதிரோன் மல்கி, பொடி வெந்து, பொங்கி, மேல் வான் சுடும்; கீழால் அடி வெந்து, கண் சுடும்;-ஆறு? | |
|
உரை
|
|
|
|