தொடக்கம் |
|
|
5. மருதம்பாணற்குத் தலைமகள் வாயில் மறுத்தது | |
124. | செவ்வழி யாழ்ப் பாண்மகனே! சீர் ஆர் தேர் கையினால் இவ் வகை ஈர்த்து உய்ப்பான் தோன்றாமுன்,-இவ் வழியே ஆடினான், ஆய் வயல் ஊரன்; மற்று எங்கையர் தோள் கூடினான், பின் பெரிது கூர்ந்து. | |
|
உரை
|
|
|
|
|
125. | மாக் கோல் யாழ்ப் பாண்மகனே! மண் யானைப் பாகனார் தூக்கோல் துடியோடு தோன்றாமுன்,-தூக் கோல் தொடி உடையார் சேரிக்குத் தோன்றுமோ,-சொல்லாய்!- கடி உடையேன் வாயில் கடந்து? | |
|
உரை
|
|
|
|
|
126. | விளரி யாழ்ப் பாண்மகனே! வேண்டா; அழையேல்; முளரி மொழியாது, உளரிக் கிளரி, நீ, பூங் கண் வயல் ஊரன் புத்தில் புகுவதன்முன், ஆங்கண் அறிய உரை. | |
|
உரை
|
|
|
|
|
127. | மென் கண் கலி வயல் ஊரன்தன் மெய்ம்மையை எங்கட்கு உரையாது, எழுந்து போய், இங்கண் குலம் காரம் என்று அணுகான்; கூடும் கூத்து என்றே அலங்கார நல்லார்க்கு அறை. | |
|
உரை
|
|
|
|
|
[இது முதல் துறைக் குறிப்புகள் ஏடுகளில் கிடைக்கப்பெறவில்லை.] | |
128. | செந்தாமரைப் பூ உற நிமிர்ந்த செந்நெல்லின் பைந் தார், புனல்வாய்ப் பாய்ந்து ஆடுவாள், அம் தார் வயந்தகம்போல், தோன்றும் வயல் ஊரன் கேண்மை நயந்து அகன்று ஆற்றாமை நன்று. | |
|
உரை
|
|
|
|
|
129. | வாடாத தாமரைமேல் செந்நெல் கதிர் வணக்கம் ஆடா அரங்கினுள் ஆடுவாள் ஈடு ஆய புல்லகம் ஏய்க்கும் புகழ் வயல் ஊரன்தன் நல் அகம் சேராமை நன்று. | |
|
உரை
|
|
|
|
|
130. | இசை உரைக்கும், என் செய்து? இர நின்று அவரை; வசை உரைப்பச் சால வழுத்தீர்; பசை பொறை மெய்ம் மருட்டு ஒல்லா-மிகு புனல் ஊரன்தன் பொய்ம் மருட்டுப் பெற்ற பொழுது. | |
|
உரை
|
|
|
|
|
131. | மடங்கு இறவு போலும் யாழ்ப் பண்பு இலாப் பாண! தொடங்கு உறவு சொல் துணிக்க வேண்டா; முடங்கு இறவு பூட்டுற்ற வில் ஏய்க்கும் பூம் பொய்கை ஊரன் பொய் கேட்டு உற்ற, கீழ் நாள், கிளர்ந்து. | |
|
உரை
|
|
|
|
|
132. | எங்கையர் இல் உள்ளானே பாண! நீ பிறர் மங்கையர் இல் என்று மயங்கினாய்; மங்கையர் இல் என்னாது இறவாது, இவண் நின் நி ......... பின்னார் இல் அந்தி முடிவு. | |
|
உரை
|
|
|
|
|
133. | பாலை யாழ்ப் பாண் மகனே! பண்டு நின் நாயகற்கு மாலை யாழ் ஓதி வருடாயோ? காலை யாழ் செய்யும் இடம் அறியாய்; சேர்ந்தாய்; நின் பொய்ம்மொழிக்கு நையும் இடம் அறிந்து, நாடு. | |
|
உரை
|
|
|
|
|
134. | கிழமை பெரியோர்க்குக் கேடு இன்மைகொல்லோ? பழமை பயன் நோக்கிக் கொல்லோ? கிழமை குடி நாய்கர் தாம் பல பெற்றாரின் கேளா, அடி நாயேன் பெற்ற அருள். | |
|
உரை
|
|
|
|
|
135. | என் கேட்டி ஏழாய்! இரு நிலத்தும் வானத்தும், முன் கேட்டும் கண்டும், முடிவு அறியேன்; பின் கேட்டு, அணி இகவா நிற்க, அவன் அணங்கு மாதர் பணி இகவான், சாலப் பணிந்து. | |
|
உரை
|
|
|
|
|
136. | எங்கை இயல்பின் எழுவல்; யாழ்ப் பாண் மகனே! தம் கையும் வாயும் அறியாமல், இங்கண் உளர உளர, உவன் ஓடிச் சால, வளர வளர்ந்த வகை. | |
|
உரை
|
|
|
|
|
137. | கருங் கோட்டுச் செங் கண் எருமை, கழனி இருங் கோட்டு மென் கரும்பு சாடி, வரும் கோட்டால் ஆம்பல் மயக்கி, அணி வளை ஆர்ந்து, அழகாத் தாம் பல் அசையின, வாய் தாழ்ந்து. | |
|
உரை
|
|
|
|
|
138. | கன்று உள்ளிச் சோர்ந்த பால் கால் ஒற்றி, தாமரைப்பூ அன்று உள்ளி அன்னத்தை ஆர்த்துவான், சென்று உள்ளி, ‘வந்தையா!’ என்னும் வகையிற்றே-மற்று இவன் தந்தையார் தம் ஊர்த் தகை. | |
|
உரை
|
|
|
|
|
139. | மருதோடு காஞ்சி அமர்ந்து உயர்ந்த நீழல், எருதோடு உழல்கின்றார் ஓதை, குருகோடு தாராத் தோறு ஆய்ந்து எடுப்பும் தண் அம் கழனித்தே- ஊராத் தேரான் தந்தை ஊர். | |
|
உரை
|
|
|
|
|
140. | மண் ஆர் குலை வாழையுள் தொடுத்த தேன் நமது என்று உண்ணாப் பூந் தாமரைப் பூ உள்ளும்;-கண் ஆர் வயல் ஊரன் வண்ணம் அறிந்து தொடுப்பாள், மயல் ஊர் அரவர் மகள். | |
|
உரை
|
|
|
|
|
141. | அணிக் குரல்மேல் நல்லாரோடு ஆடினேன் என்ன, மணிக் குரல்மேல் மாதராள் ஊடி, மணிச் சிரல் பாட்டை இருந்து அயரும் பாய் நீர்க் கழனித்தே- ஆட்டை இருந்து உறையும் ஊர். | |
|
உரை
|
|
|
|
|
142. | தண் கயத்துத் தாமரை, நீள் சேவலைத் தாழ் பெடை புண் கயத்து உள்ளும் வயல் ஊர! வண் கயம் போலும் நின் மார்பு, புளி வேட்கைத்து ஒன்று; இவள் மாலும் மாறா நோய் மருந்து. | |
|
உரை
|
|
|
|
|
143. | நல் வயல் ஊரன் நறுஞ் சாந்து அணி அகலம் புல்லி, புடை பெயரா மாத்திரைக்கண், புல்லியார் கூட்டு முதல் உறையும் கோழி துயில் எடுப்ப, பாட்டு முரலுமாம், பண். | |
|
உரை
|
|
|
|
|
144. | அரத்தம் உடீஇ, அணி பழுப்பப் பூசி, சிரத்தையால் செங்கழுநீர் சூடி, பரத்தை நினை நோக்கிக் கூறினும், ‘நீ மொழியல்’ என்று, மனை நோக்கி, மாண விடும். | |
|
உரை
|
|
|
|
|
145. | பாட்டு அரவம், பண் அரவம், பணியாத கோட்டு அரவம், இன்னிவை தாம் குழும, கோட்டு அரவம் மந்திரம் கொண்டு ஓங்கல் என்ன, மகச் சுமந்து, இந்திரன்போல் வந்தான், இடத்து. | |
|
உரை
|
|
|
|
|
146. | மண் கிடந்த வைய.... மற்றுப் பெரியராய் எண் கிடந்த நாளான் இகழ்ந்து ஒழுக, பெண் கிடந்த தன்மை ஒழிய, தரள முலையினாள் மென்மை செய்திட்டாள், மிக. | |
|
உரை
|
|
|
|
|
147. | செங் கண் கருங் கோட்டு எருமை சிறுகனையா அங்கண் கழனிப் பழனம் பாய்ந்து, அங்கண் குவளை அம் பூவொடு செங் கயல் மீன் சூடி, தவளையும் மேற்கொண்டு வரும். | |
|
உரை
|
|
|
|
|
148. | இருள் நடந்தன்ன இருங் கோட்டு எருமை, மருள் நடந்த மாப் பழனம் மாந்திப்-பொருள் நடந்த கல் பேரும் கோட்டால் கனைத்து, தம் கன்று உள்ளி, நெல் போர்வு சூடி வரும். | |
|
உரை
|
|
|
|
|
149. | புண் கிடந்த புண்மேல் நுன் நீத்து ஒழுகி வாழினும், பெண் கிடந்த தன்மை பிறிதுஅரோ........ கிடந்து செய்யாத மாத்திரையே, செங் கயல்போல் கண்ணினாள் நையாது தான் நாணுமாறு. | |
|
உரை
|
|
|
|
|
150. | கண்ணுங்கால் என்கொல்? கலவை யாழ்ப் பாண் மகனே! எண்ணுங்கால், மற்று இன்று; இவெளாடு நேர் எண்ணின், கடல் வட்டத்து இல்லையால்; கல் பெயர் சேராள்; அடல் வட்டத்தார் உளரேல் ஆம். | |
|
உரை
|
|
|
|
|
151. | சேறு ஆடும் கிண்கிணிக் கால் செம் பொன் செய் பட்டத்து, நீறு ஆடும் ஆயது இவன் நின் முனா; வேறு ஆய மங்கையர் இல் நாடுமோ?-மாக் கோல் யாழ்ப் பாண் மகனே!- எங்கையர் இல் நாடலாம் இன்று.151 | |
|
உரை
|
|
|
|
|
152. | முலையாலும், பூணாலும், முன்கண் தாம் சேர்ந்த விலையாலும், இட்ட குறியை உலையாது நீர் சிதைக்கும் வாய்ப் புதல்வன் நிற்கும், முனை; முலைப்பால் தார் சிதைக்கும்; வேண்டா, தழூஉ.152 | |
|
உரை
|
|
|
|
|
153. | துனி, புலவி, ஊடலின் நோக்கேன்; தொடர்ந்த கனி கலவி காதலினும் காணேன்; முனிவு அகலின், நாணா நடுக்கும்; நளி வயல் ஊரனைக் காணா, எப்போதுமே, கண்.153 | |
|
உரை
|
|
|
|