1. சென்ற புகழ், செல்வம், மீக்கூற்றம், சேவகம்
நின்ற நிலை, கல்வி, வள்ளன்மை-என்றும்
அளி வந்து ஆர் பூங் கோதாய்!-ஆறும் மறையின்
வழிவந்தார்கண்ணே வனப்பு.
   
2. கொலை புரியான், கொல்லான், புலால் மயங்கான், கூர்த்த
அலைபுரியான், வஞ்சியான், யாதும் நிலை திரியான்,
மண்ணவர்க்கும் அன்றி,-மது மலி பூங் கோதாய்!-
விண்ணவர்க்கும் மேலாய்விடும்.
   
3. தவம் எளிது; தானம் அரிது; தக்கார்க்கேல்,
அவம் அரிது; ஆதல் எளிதால்; அவம் இலா
இன்பம் பிறழின், இயைவு எளிது; மற்று அதன்
துன்பம் துடைத்தல் அரிது.
   
4. இடர் தீர்த்தல், எள்ளாமை, கீழ் இனம் சேராமை,
படர் தீர்த்தல் யார்க்கும், பழிப்பின் நடை தீர்த்தல்,
கண்டவர் காமுறும் சொல்,-காணின், கலவியின்கண்
விண்டவர் நூல் வேண்டாவிடும்.
   
5. தனக்கு என்றும், ஓர் பாங்கன், பொய்யான்; மெய் ஆக்கும்;
எனக்கு என்று இயையான், யாது ஒன்றும்; புனக் கொன்றை
போலும் இழையார் சொல் தேறான்; களியானேல்;-
சாலும், பிற நூலின் சால்பு.
   
6. நிறை உடைமை, நீர்மை உடைமை, கொடையே,
பொறை உடைமை, பொய்ம்மை, புலாற்கண் மறை உடைமை,-
வேய் அன்ன தோளாய்!-இவை உடையான் பல் உயிர்க்கும்
தாய் அன்னன் என்னத் தகும்.
   
7. இன்சொல், அளாவல், இடம், இனிது ஊண், யாவர்க்கும்
வன்சொல் களைந்து, வகுப்பானேல் மென் சொல்,-
முருந்து ஏய்க்கும் முள் போல் எயிற்றினாய்!-நாளும்
விருந்து ஏற்பர், விண்ணோர் விரைந்து.
   
8. உடன்படான், கொல்லான், உடன்றார் நோய் தீர்த்து,
மடம் படான், மாண்டார் நூல் மாண்ட இடம் பட
நோக்கும் வாய் நோக்கி, நுழைவானேல்,-மற்று அவனை
யாக்குமவர் யாக்கும், அணைந்து.
   
9. கற்றாரைக் கற்றது உணரார் என மதியார்,
உற்றாரை அன்னணம் ஓராமல், அற்றார்கட்கு
உண்டி, உறையுள், உடுக்கை இவை ஈந்தார்-
பண்டிதராய் வாழ்வார், பயின்று.
   
10. செங் கோலான், கீழ்க் குடிகள், செல்வமும்; சீர் இலா
வெங் கோலான், கீழ்க் குடிகள், வீந்து உகவும்; வெங் கோல்
அமைச்சர், தொழிலும், அறியலம்-ஒன்று ஆற்ற
எனைத்தும் அறியாமையான்.