தொடக்கம் |
|
|
21. | இளமை கழியும்; பிணி, மூப்பு, இயையும்; வளமை, வலி, இவை வாடும்; உள நாளால், பாடே புரியாது,-பால் போலும் சொல்லினாய்!- வீடே புரிதல் விதி. | |
|
உரை
|
|
|
|
|
22. | வாள் அஞ்சான், வன்கண்மை அஞ்சான், வனப்பு அஞ்சான், ஆள் அஞ்சான், ஆய் பொருள்தான் அஞ்சான்; நாள் எஞ்சாக் காலன் வரவு ஒழிதல் காணின், வீடு எய்திய பாலின் நூல் எய்தப்படும். | |
|
உரை
|
|
|
|
|
23. | குணம் நோக்கான்; கூழ் நோக்கான்; கோலமும் நோக்கான்; மனம் நோக்கான், மங்கலமும் நோக்கான்; கணம் நோக்கான்;- கால் காப்பு வேண்டான்,-பெரியார் நூல் காலற்கு வாய் காப்புக் கோடல் வனப்பு. | |
|
உரை
|
|
|
|
|
24. | பிணி, பிறப்பு, மூப்பொடு, சாக்காடு, துன்பம், தணிவு இல் நிரப்பு, இவை தாழா அணியின், அரங்கின்மேல் ஆடுநர்போல் ஆகாமல் நன்று ஆம், நிரம்புமேல், வீட்டு நெறி. | |
|
உரை
|
|
|
|
|
25. | பாடு அகம் சாராமை; பாத்திலார்தாம் விழையும் நாடகம் சாராமை; நாடுங்கால் நாடகம் சேர்ந்தால், பகை, பழி, தீச்சொல்லே, சாக்காடே, தீர்ந்தாற்போல் தீரா வரும். | |
|
உரை
|
|
|
|
|
26. | மாண்டு அமைந்தார் ஆய்ந்த மதி வனப்பே, வன் கண்மை, ஆண்டு அமைந்த கல்வியே, சொல் ஆற்றல், பூண்டு அமைந்த காலம் அறிதல், கருதுங்கால்,-தூதுவர்க்கு ஞாலம் அறிந்த புகழ். | |
|
உரை
|
|
|
|
|
27. | அஃகு, நீ, செய்யல், என அறிந்து, ஆராய்ந்தும், வெஃகல், வெகுடலே, தீக் காட்சி, வெஃகுமான், கள்ளத்த அல்ல கருதின், இவை மூன்றும் உள்ளத்த ஆக உணர்! | |
|
உரை
|
|
|
|
|
28. | மை ஏர் தடங் கண் மயில் அன்ன சாயலாய்!- மெய்யே உணர்ந்தார் மிக உரைப்பர்; பொய்யே, குறளை, கடுஞ் சொல், பயன் இல் சொல், நான்கும் மறலையின் வாயினவாம், மற்று. | |
|
உரை
|
|
|
|
|
29. | நிலை அளவில் நின்ற நெடியவர்தாம் நேரா, கொலை, களவு, காமத் தீ வாழ்க்கை;-அலை அளவி, மை என நீள் கண்ணாய்!-மறுதலைய இம் மூன்றும் மெய் அளவு ஆக விதி! | |
|
உரை
|
|
|
|
|
30. | மாண்டவர் மாண்ட அறிவினால், மக்களைப் பூண்டு அவர்ப் போற்றிப் புரக்குங்கால்,-பூண்ட ஒளரதனே, கேத்திரசன், கானீனன், கூடன்,கிரிதன், பௌநற்பவன், பேர். | |
|
உரை
|
|
|
|