தொடக்கம் |
|
|
51. | உண் நீர் வளம், குளம், கூவல், வழிப் புரை, தண்ணீரே, அம்பலம், தான் பாற்படுத்தான்-பண் நீர பாடலொடு ஆடல் பயின்று, உயர் செல்வனாய், கூடலொடு ஊடல் உளான், கூர்ந்து. | |
|
உரை
|
|
|
|
|
52. | இல் இழந்தார், கண் இழந்தார், ஈண்டிய செல்வம் இழந்தார், நெல் இழந்தார், ஆன் நிரைதான் இழந்தார்க்கு, எல் உழந்து, பண்ணி ஊண் ஈய்ந்தவர்-பல் யானை மன்னராய், எண்ணி ஊண் ஆர்வார், இயைந்து. | |
|
உரை
|
|
|
|
|
53. | கடம் பட்டார், காப்பு இல்லார், கைத்து இல்லார், தம் கால் முடம் பட்டார், மூத்தார், மூப்பு இல்லார்க்கு உடம்பட்டு, உடையராய் இல்லுள் ஊண் ஈத்து, உண்பார்-மண்மேல் படையராய் வாழ்வார், பயின்று. | |
|
உரை
|
|
|
|
|
54. | பார்ப்பார், பசித்தார், தவசிகள், பாலர்கள், கார்ப்பார், தமை யாதும் காப்பு இலார், தூப் பால நீண்டாரால் எண்ணாது நீத்தவர்-மண் ஆண்டு, பண்டாரம் பற்ற வாழ்வார். | |
|
உரை
|
|
|
|
|
55. | ‘ஈன்றார், ஈன்கால் தளர்வார், சூலார், குழவிகள், மான்றார், வளியால் மயங்கினார்க்கு, ஆனார்!’ என்று, ஊண் ஈய்த்து, உறு நோய் களைந்தார்-பெருஞ் செல்வம்- காண் ஈய்த்து வாழ்வார், கலந்து. | |
|
உரை
|
|
|
|
|
56. | தளையாளர், தாப்பாளர், தாழ்ந்தவர், பெண்டிர், உளையாளர், ஊண் ஒன்றும் இல்லார், கிளைஞராய்- மா அலந்த நோக்கினாய்!-ஊண் ஈய்ந்தார், மாக் கடல் சூழ் நாவலம் தீவு ஆள்வாரே, நன்கு. | |
|
உரை
|
|
|
|
|
57. | கருஞ் சிரங்கு, வெண் தொழு நோய், கல், வளி, காயும் பெருஞ் சிரங்கு, பேர் வயிற்றுத் தீயார்க்கு, அருஞ் சிரமம் ஆற்றி, ஊண் ஈத்து, அவை தீர்த்தார்-அரசராய்ப் போற்றி ஊண் உண்பார், புரந்து. | |
|
உரை
|
|
|
|
|
58. | காமாடார், காமியார், கல்லார் இனம் சேரார், ஆம் ஆடார், ஆய்ந்தார் நெறி நின்று, தாம் ஆடாது, ஏற்றாரை இன்புற ஈய்ந்தார், முன், இம்மையான் மாற்றாரை மாற்றி வாழ்வார். | |
|
உரை
|
|
|
|
|
59. | வணங்கி, வழி ஒழுகி, மாண்டார் சொல் கொண்டு, நுணங்கிய நூல் நோக்கி, நுழையா, இணங்கிய பால் நோக்கி வாழ்வான்-பழி இல்லா மன்னனாய், நூல் நோக்கி வாழ்வான், நுனித்து. | |
|
உரை
|
|
|
|
|
60. | பெருமை, புகழ், அறம், பேணாமை சீற்றம், அருமை நூல், சால்பு, இல்லார்ச் சாரின், இருமைக்கும், பாவம், பழி, பகை, சாக்காடே, கேடு, அச்சம், சாபம்போல் சாரும், சலித்து. | |
|
உரை
|
|
|
|