தொடக்கம் |
|
|
61. | ஆர்வமே, செற்றம், கதமே, அறையுங்கால், ஓர்வமே, செய்யும் உலோபமே, சீர் சாலா மானமே, மாய உயிர்க்கு ஊனம் என்னுமே- ஊனமே தீர்ந்தவர் ஓத்து. | |
|
உரை
|
|
|
|
|
62. | கூத்தும், விழவும், மணமும், கொலைக் களமும், ஆர்த்த முனையுள்ளும், வேறு இடத்தும், ஓத்தும் ஒழுக்கும் உடையவர் செல்லாரே; செல்லின், இழுக்கும் இழவும் தரும். | |
|
உரை
|
|
|
|
|
63. | ஊணொடு, கூறை, எழுத்தாணி, புத்தகம், பேணொடும் எண்ணும், எழுத்து, இவை மாணொடு கேட்டு எழுதி, ஓதி, வாழ்வார்க்கு ஈய்ந்தார்-இம்மையான் வேட்டு எழுத வாழ்வார், விரிந்து. | |
|
உரை
|
|
|
|
|
64. | உயர்ந்தான் தலைவன் என்று ஒப்புடைத்தா நோக்கி, உயர்ந்தான் நூல் ஓதி ஒடுங்கி, உயர்ந்தான் அருந் தவம் ஆற்றச் செயின், வீடு ஆம் என்றார்- பெருந் தவம் செய்தார், பெரிது. | |
|
உரை
|
|
|
|
|
65. | காலனார் ஈடு அறுத்தல் காண்குறின், முற்று உணர்ந்த பாலனார் நூல் அமர்ந்து, பாராது, வாலிதா, ஊறுபாடு இல்லா உயர் தவம் தான் புரியின், ஏறுமாம், மேல் உலகம் ஓர்ந்து. | |
|
உரை
|
|
|
|
|
66. | பொய் தீர் புலவர் பொருள் புரிந்து ஆராய்ந்த மை தீர் உயர் கதியின் மாண்பு உரைப்பின்,-மை தீர் சுடர் இன்று; சொல் இன்று; மாறு இன்று; சோர்வு இன்று; இடர் இன்று; இனி துயிலும் இன்று. | |
|
உரை
|
|
|
|
|
67. | கூர் அம்பு, வெம் மணல், ஈர் மணி, தூங்கலும், ஈரும் புகை, இருளோடு, இருள், நூல் ஆராய்ந்து, அழி கதி, இம் முறையான், ஆன்றார் அறைந்தார்- இழி கதி, இம் முறையான் ஏழு. | |
|
உரை
|
|
|
|
|
68. | சாதல், பொருள் கொடுத்தல், இன்சொல், புணர்வு உவத்தல், நோதல், பிரிவில் கவறலே, ஓதலின் அன்புடையார்க்கு உள்ளன ஆறு குணம் ஆக, மென் புடையார் வைத்தார், விரித்து. | |
|
உரை
|
|
|
|
|
69. | எடுத்தல், முடக்கல், நிமிர்த்தல், நிலையே, படுத்தலோடு, ஆடல், பகரின், அடுத்து உயிர் ஆறு தொழில் என்று அறைந்தார், உயர்ந்தவர்- வேறு தொழிலாய் விரித்து. | |
|
உரை
|
|
|
|
|
70. | ஐயமே, பிச்சை, அருந் தவர்க்கு ஊண், ஆடை, ஐயமே இன்றி அறிந்து ஈந்தான், வையமும் வானும் வரிசையால்தான் ஆளும்-நாளுமே, ஈனமே இன்றி இனிது. | |
|
உரை
|
|
|
|